Monday, December 1, 2014

தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம்


தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம் பற்றி நிறைய விழப்புணர்வு விளம்பரங்களை தற்போது அரசு அதிகப்படுத்தியிருப்பது ஆரோக்யமான ஒன்றாக இருந்தாலும். தற்போதைய அரசு தூய்மை இந்தியா போன்ற பிரச்சாரங்களை முன்னிறுத்தி விடுகிறார்களே தவிர அதன் செயல் திட்டங்கள் என்ன என்பது பற்றி சரியாக விவரிப்பதில்லை. அதேபோல் பெரும்பாலும் அவசரகதியில் அனைத்தையும் செயல்படுத்துவதாக உள்ளது.
சாலையை சுத்தம் செய்வது என்பதை விட சாலைகளில் குப்பைகளை போடுவதை தவிர்ப்பதே சிறந்தது. அப்படியென்றால் குப்பைகளை எங்குபோடுவது அதற்கான வசதிகள் இருக்கிறதா?. ஒருவர் குப்பையை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என குப்பைத்தொட்டியை தேடினால் குப்பைத்தொட்டிகள் பெயரளவில் அதுவும் வெகு தூரங்களில் தான் வைக்கப்பட்டுள்ளது ஒருவர் தன் கையில் இருக்கும் குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என நினைக்க வைக்கவே பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டியுள்ள நிலையில் அவரை குப்பைதொட்டி தேடி வெகு தூரம் செல்வதென்பது வாய்பில்லாத ஒன்று. குறைந்தது 100 அடிக்கு ஒரு குப்பைத்தொட்டி என நகர்புரங்களில் நிறுவுவது இந்த திட்டம் வெற்றியடைய 100 சதவீதம் உதவியாக இருக்கும். பிரபலங்களை தெரு கூட்டுவதுபோல் நடிக்க கூப்பிட்டு பயன்படுத்தாமல். பிரபலங்கள் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு நகரங்களாக குப்பைத்தொட்டிகளை ஸ்பான்சர் செய்யலாம்.
பிறகு திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது பற்றிய விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்படுகிறது. ஒருவர் சிறுநீர் கழிப்பதை கைத்தட்டி அவர் சிறுநீர் கழிக்காமல் தடுப்பது போல் அந்த விளம்பரம் இருக்கிறது. சரி நகர்புறங்களில் இருக்கும் ஒருவர் சிறுநீர் கழிக்கவேண்டுமால் எங்கு சென்று கழிக்க முடியும். உதாரணமாக நமது அறந்தை நகரத்தை எடுத்துக்கொண்டால் ஒருவர் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமானால் எங்கு செல்வார். அதற்கான வசதியை அரசு செய்து கொடுத்திருக்கிறதா. இங்கு இருக்கும் தொழில் நிறுவன கட்டிடங்கள் அனைத்திலும் கழிவறை வசதி உள்ளதா.??? தொழில்நிறுவன கட்டிடங்கள் அனைத்திலும் கழிவறை கட்டாயமாக்கப்பட்டு அதை தரைத்தளத்தில் அனைவரும் பயன்படுத்தும் படி வைக்கவேண்டும். அதை தூய்மைபடுத்தும் பணியை அரசு ஏற்றுக்கொண்டால் பெயரளவிற்கு பொதுக்கழிவறை அமைக்க தேவையில்லை...

Thursday, November 27, 2014

அன்எம்ளாய்டட் யங்ஸ்டர்ஸ் (Unemployed Youngsters)

அரசு வேலை மட்டும் தான் எம்ப்லாய்மெண்ட் அரசு பணியில் இல்லாதவர்கள் அன்எம்ளாய்டட் ??? இது சில அரசு வேலையில் உள்ளவர்கள் மற்றும் சில பொதுமக்களின் டயலாக். அப்போ மற்ற தொழில்கள் வேலைகள் எல்லாம் வைலையில்லையா?? உங்கள் அன்றாட தேவைகளை நீங்கள் சொல்லும் எந்த எம்ளாய்மெண்டில் (அரசு) பூர்த்தி செய்து கொள்கிறீர்கள். நீங்கள் சம்பளம் வாங்குவது அரசு வேலையாக இருக்கலாம் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது யார்???
அரசு வேலை மட்டும்தான் வேலை என்ற மனபோக்கை மக்கள் மனதிலும் உண்டாக காரணம் பெரும்பாலன அரசு ஊழியர்களின் ஆடம்பர வாழ்வும் எந்த பிரச்சனைகளும் அவர்களுக்கு இல்லை என்பதும் தான்.
இப்படியாக எல்லோரிடமும் இந்த மனப்போக்கு இருந்தால் அது சமுதாய ஆரோக்கியத்திற்கு முரணானது.
இத்தனை அரசு ஊழியர்களில் மக்கள் மனதில் நிற்பவர்கள் எத்தனை பேர்.
உங்கள் ஊழியர் சங்க கூட்டங்களில் எத்தனை முறை நாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். நம் வேலையை விரைந்து முடிக்க என்னென்ன நடவடிக்கைகள் செய்ய வேண்டும். என்று தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். லஞ்சம் வாங்கினார் என்று எத்தனைபேரை உங்கள் சங்கங்களை விட்டு நீக்கியிருக்கிறீர்கள்.
ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்று பிடிபட்டால் அவரை விடுவிக்க எவ்வளவு பிரசர் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்பீர்கள். அதற்கும் உங்கள் சங்கங்களிலே லஞ்சம் வாங்குவீர்கள்.
சரியாக தன் கடமையை செய்பவர் ஒரு அரசு அலுவலகத்தில் இருந்தால் அவருக்கு அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் எத்தனை பட்டப்பெயர். மேலும் அவர் வேலையை கெடுக்க எத்தனை இடஞ்சல்கள் கொடுப்பீர்கள்.
தனியார் நிறுவனத்தில் மெசின் போல் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர். அரசு வேலை கிடைத்ததும் நேர்மாறாக மாறிவிடுவதையும் நாம் உணர்ந்திருப்போம்.
என்னடா டைட்டில விட்டுமேட்டர் வேற மாதிரி போகுதே அப்படினு யோசிக்கலாம்.
அரசு வேலையில் இல்லாதவர்களை அப்படி நினைக்க வைக்க காரணம் தனியார் கம்பெனியில் வேலை சரியாக செய்யவில்லை என்றால் உடனடியாக அவரை வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். ஆனால் அரசு வேலையில் அப்படி வாய்ப்பில்லை. பல அலுவலகங்களில் மேலதிகாரிகளா அதிகாரம் இல்லாதவர்களாகதான் இருப்பார்கள்.
தேசத்தலைவர்கள் தேசத்திற்கு உழைத்த பலர் அரசு வேலையில் இல்லாதவர்கள்.
எங்காவது ஒரு சமூக நீதிகேட்டு நியாத்திற்கு போரடும் ஒருவன் அரசு வேலையில் இல்லை. அவன் வேலையில்லாதவன்.
சமூக பொறுப்பு அதிகம் இருக்க வேண்டியது அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தான்.
ஆனால் அது ஏனோ நம் தேசத்தில் குறைவு
(நல்ல அதிகாரிகள் இல்லை என்று சொல்லவில்லை அவர்களும் இருக்கிறார்கள்)

Tuesday, November 18, 2014

வட்டிக்கு வாங்குவது கொடுப்பதை விட ஷேர் டிரேட் ஆபத்தானது

வட்டிக்கு வாங்குவது கொடுப்பது பாவம் என்றும் எனவே ஷேர் டிரேட் செய்யலாம் என்றும் கூறுகிறார்கள்...
வட்டிக்கு விடுவது வாங்குவது எந்த வகையில் பாவம் என்று நினைக்கிறோமோ? அதை விட பாவமானது ஷேர் டிரேடிங். வட்டிக்கு விட்டாலாவது ஒருவர் ஒரு தொழிலில் முதலீடு செய்து அந்த முதலீட்டு லாபத்தை வட்டியாக கொடுப்பார்.
ஆனால் ஷேர் டிரேடில் உங்களுக்கு இலாபம் வந்தது என்றால் எங்கோ ஒருவர் தன் முதலீடை(பணத்தை) ஏமார்ந்திருக்கிறார்.
ஷேர் டிரேடில் எந்த ஒரு உற்பத்தியும் நடைபெறவில்லை என்பதே உண்மை.
ஷேர் என்ற சரியான வியாபார உத்தியை நோகாமல் பணம் பெற வேண்டும் என்ற பொருளாதார மேதைகள் ஷேர் டிரோடாக மாற்றி வளர்ச்சி என்பதையே ஷேர் என்று நினைக்கும் வகையில் மக்களை நம்பவைத்துவிட்டனர்.
உற்பத்தியையே ஆணிவேராக கொண்ட நமது நாட்டின் பொருளாதார சூழலுக்கு ஒரு போதும் உதவாது இந்த ஷேர் டிரேட்

Sunday, November 9, 2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி 09.11.2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி

சினிமா கலைஞர்களின் கற்பனைச் சுதந்திரம் மற்றும் அந்த கருத்து சுதந்திரத்தை பறிக்கும் போராட்டகாரர்கள்

எல்லாரும் அவங்க அவங்க சார்பா நல்லா பேசுனாங்க…

டைரக்டர் கமலக்கண்ணன் இது எங்கள் கருத்து சுத்திரத்தை கற்பனை சுதந்திரம்  நாங்களா உங்கள பாருங்கனு கூப்பிட்டோம்னு சொன்னார்… நீங்க ஏன் போராடுகறீங்க இது மாதிரி உட்கார்ந்து பேச வேண்டியது தானே அப்படினும் சொன்னார்…

ஒரு ஓவியர் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் அப்ப நாங்க அதை பார்த்துக்கொண்டு அவரோட கற்பனைச்சுதந்திரம்னு உட்கார்ந்திருக்கனுமா… ஒரு நிறுவனம் கடவுள்களின் படங்களை ஜட்டியில் பிரிண்ட் செய்து வெளியிட்டார்கள் அதை டிசைன் சுதந்திரம்னு சும்மா இருக்கனுமா…

சரி அது உங்க கற்பனைச் சுதந்திரம்னு சொல்றீங்க …
படம் ஆரம்பிக்கும் போது இதில் வரும் கதையும் கருத்துக்களும் கற்பனைனு போடுறீங்க… முடிவில் விவசாயிகளுக்கு சமர்பணம்னும் முடிக்கிறீங்க…

அப்பறம் அந்த கதை திருட்டு கதைனு சிலர் சொல்ல ஆரம்பிச்சதும் இது ஒரு ஊரோட கதை நான் அவங்க படும் கஷ்டத்தை பார்த்து எடுத்த படம்னு சொல்றீங்க…

7 ஆம் அறிவுனு ஒரு படம்
நடிகர் சூர்யா அந்த பட வெளியீட்டு விழாவில் “ஒரு தமிழரின் புகழ் தமிழர்களுக்கே தெரியாமல் இருப்பதை கண்டு எனக்கு கோபம் இதை கேட்டதும் தமிழுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் எல்லாருக்கும் தமிழனின் பெருமையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று இதில் நடித்தேன்” அப்படினு சொன்னார் இவர் பேசியது சினமால இல்ல ஒரு பொது மேடையில்….

இதையே டைரக்டர் முருகதாசும் பேசினார்…
ஆனா அதோட வேற்று மொழி பதிப்புகளில் அந்தந்த மாநிலத்தில் இருந்து வருவது போதும் இருக்கும்…
விஸ்வரூபம் கமல் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய படம் அதில் கோவை பற்றி ஒரு வசனம் வந்திருக்கும்… நீங்கள் சொல்வதுபோல் கற்பனை என்றால் அவர் கற்பனை என்ற சொல்ல வேண்டியது தானே ஏன் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்…

அப்படி ஆதாரம் இருந்தால் அதை காட்ட வேண்டாம் ஏன் வேற்று மொழி பதிப்புகளில் வேறு வேறு ஊர்களின் பெயர்களை பயன்படுத்தினார்
இப்படி கற்பனைனு சொல்லிட்டு காசுக்காக எதை எதையாவது கற்பனை பண்ணுவீங்க வேறா யாரும் எதுவும் கேட்கக்கூடாது…
படத்தை ரிலீஸ் பண்ணிட்டு விவாதம் பண்ணலாம்னு நீங்க கூப்பிடுறதே அந்த படத்தை புரோமோட் செய்யதான்… படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னால் நீங்கள் நான் இப்படி படம் எடுத்திருக்கேன் அப்படினு சொல்லி விவாதித்துவிட்டு  ரிலீஸ் செய்லாமே…

அப்பறம் எதுக்கு சென்சார் போர்டு இருக்கு நீங்க அங்கதான் கேக்கனும் என்று சொல்பவர்கள்…
சென்சார் போர்டு எப்படினு உங்களுக்கே தெரியும் அந்த சென்சார் போர்டு ரஜினி, சங்கர் … படங்களையும் சாதாரண டைரக்டர் புது ஹீரோ புது தயாரிப்பாளர் படங்களையும் ஒரே மாதிரி தான் பார்ப்பார்களா…

சந்திரமுகி படதில் வரும் அத்தனை காமெடிகளும் இரட்டை அர்த்த வசனங்களுடனே வரும் … கற்பனை வாதி வேண்டுமானால் “நீங்கள் ஏன் தவறான பார்வையில் பார்க்கிறீர்கள”; என்று கேட்கலாம்…
அப்போ நீங்க ரெட்டை அர்த்தத்தில் அதை எழுதவில்லை என்றால்;… அந்த வசனத்துடன் வடிவேலுவையும் வேலைக்காரியையும் ஒப்பிட்டுக்காட்டியதும் உங்கள் அந்த கற்பனை கருமம் தானே....

இதில் வரும் தடித்த வார்த்தைகளுக்கு ஒரு மியூட் கூட செய்திருக்கமாட்டார்கள்…

ஒரு அரசாங்கந்தை மாற்றவே 5 வருடம் கழித்துதான் முடியும் என்கிறபோது நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிட்டு நாங்க சென்சார் போடுட்ட கேட்கறதுக்குள்ள என்னென்ன நடக்கும்னு உங்களுடைய அந்த கற்பனை படங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது…

நல்லபடங்கள் நல்லகற்பனையாளர்கள் பலர் இருக்கிறார்கள் உண்மைதான் ஆனால் நாங்கள் திரைத்துறை என்று கூறி அனைவருக்கும் வக்கலத்து வாங்குறீங்க…

போராடுவது தப்புனா இதே திரைத்துறை உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டமும் ஒரு காலத்தில் ஒன்றாக திரண்டு நெய்வேலிக்கெல்லாம் போனீங்களே எதுக்க…

#உங்களுக்கு_வந்தா_இரத்தம்_மற்றவங்களுக்கு_தக்காளிச்சட்னியா….

Friday, November 7, 2014

மூடநம்பிக்கை என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு

நான் ரிஜிஸ்டர் மேரேஜ்தான் பண்ணிப்பேன்னு சொல்லலாம் அது அவர் அவர் விருப்பம்.
எனக்கு தாலிகட்டி மேரேஜ் பண்றது பிடிக்கவில்லை. தாலிகட்டினாதா மேரேஜா அப்பதான் நம்பிக்கை வருமா அது மூட நம்பிக்கை என சொல்லி பெரியார் கொள்கையை பின்பற்றுகிறேன் என சொல்பவர்கள்.
கடவுள் நம்பிக்கை என மூடநம்பிக்கையான விசயங்களை செய்பவர்களை விட இவர்கள் எந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பதே புரியவில்லை.
பெரியார் என்ன சொன்னார் என சொல்பவர்கள் ஏன் சொன்னார் என ஏன் சிந்திக்கவில்லை. அவரே நான் சொல்வதை உன் அறிவிடம் கேட்டு உன் அறிவு சொல்வது போல் நட என்றே சொல்லியிருக்கிறா.
ஆனால் இவர்கள் சொல்வதைப்பார்த்தால் இவர்கள் மனதில் பெரியார் கடவுளாக தெரிவதாகவே தெரிகிறது.
தாலிகட்டுனாதான் கணவன் மனைவி என்ற நம்பிக்கையா என கேட்பவர் அப்ப ஏன் ரிஜிஸ்டர் பண்ணாதான் கணவன் மனைவியா உங்க அறிவையே கேட்டு இரண்டு பேரும் சும்மா குடும்பம் நடத்த வேண்டியது தானே...
மேற்கத்திய பாசைல ”லிவ்விங் டு கெதர்”
இதை ஏன் பெரியார் சொன்னார்னு சொல்றீங்க ஆண்டாண்டு காலமா மேற்கத்திய கலாச்சாரம் இதுதானே...
முதலில் பெரியார் என்ன சொன்னார்னு இந்த கடவுள் கொள்கையோட திரியறவங்க மாதிரி கண்மூடித்தனமா திரியாம ஏன் சொன்னார்னு பல பேர் யோசிக்கமா ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும் என்றே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
மூடநம்பிக்கை என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு

Sunday, November 2, 2014

குழந்தைகள் உறவுகளை தமிழிலேயே கூப்பிட பழக்குங்கள் அதுவே தமிழுக்கு கவுரவம் என்பதைவிட நமக்கு அது தான் கவுரவம்

ஒரு குழந்தை அம்மாவைப்பார்த்து முதல் முதலாக எனக்கு எழுத சொல்லிக்கொடுனு சொன்னான் உடனே அவங்களும் ஒரு நோட் பேனாவ எடுத்து எழுத சொல்லிக்கொடுக்க உட்கார்ந்தாங்க ...
ஆனா அவங்க முதன் முதலாக எழுத சொல்லிக்கொடுத்த எழுத்து 'A` ...
முதன் முதலாக எழுத சொல்லிக்கொடுக்கும் போது ‘அ‘ னு தாய்மொழில ஆரம்பித்தால் தான் என்ன...
அதே போல் தற்போதைய நவநாகரீக அம்மாக்கள் குழந்தைகள் டாடி , மம்மி என்று தான் கூப்பிட வேண்டும் என்று நினைப்பதோடு குழந்தைகளையும் அப்படியே கூப்பிடவும் பழக்கிவிடுகிறார்கள்...
அம்மா அப்பா என்று தமிழில் கூப்பிடுவது கவுரவ குறைச்சலாகவும் அவமானமாகவும் தோன்றுமானால்... அவர்கள் அவர்களது அம்மா அப்பாவை தமிழில் தான் கூப்பிடுகிறார்கள்.
அப்படி என்றால் அவர்கள் அம்மா அப்பாவை தினமும் தமிழில் கூப்பிட்டு அவர்களை அவமானப்படுத்துகிறார்களா???
ஏன் இந்த போலி சந்தோசம்
எப்படி குழந்தைகள் முதன் முதலாக பேசும் போது அம்மாவையும் அப்பாவையும் தான் கூப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறீர்களோ...
அதை அவர்கள் தமிழில் கூப்பிடுவதுதான் சிறப்பு...
குழந்தைகள் உறவுகளை தமிழிலேயே கூப்பிட பழக்குங்கள் அதுவே தமிழுக்கு கவுரவம் என்பதைவிட நமக்கு அது தான் கவுரவம்..

Saturday, October 25, 2014

கத்தி




கத்தி

எதிர்பார்ப்புடனும் எதிர்ப்புடனும் விஜய் முருகதாஸ் கூட்டணில் வெளிவந்திருக்கும் படம். படம் எப்படி வெளிய வந்தது என்பதை எந்த படத்திலும் காட்டாத ஒரு டிவி சேனலை காட்டி புரியவைத்திருக்கிறார்கள்

விஜய்- 
முதன் முதலாக சரியான கதைகளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய், இதுவரை விஜயை இயக்கிய இயக்குனர்கள் விஜயை அழகாய் பார்த்தார்கள் முருகதாஸ் மட்டுமே அவரை சரியான கதைக்களத்தில் வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

மாஸ், ஹீரோயிசம் என்பதை விஜய்க்கு சரியாக புரியவைத்திருக்கிறார் இயக்குனர். சொல்லப்போனால் விஜய்க்கு சரியான பாதையை துப்பாக்கி முதல் அமைத்துக்கொடுத்துவிட்டார் முருகதாஸ் என்றே சொல்ல வேண்டும்.

விஜய்க்கு சரியான கதை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதன் முதலாக கை தட்டி பாராட்டும் அளவிற்கு நடித்திருக்கிறார் விஜய். கண்டிப்பா ஒரு விருது கொடுத்து பாராட்ட வேண்டும்.

சமந்தா-
படத்தின் ஹீரோயின் அவ்வளவுதான் சொல்றதுக்கு வேற எதும் இல்லை. அஞ்சான் அளவிற்கு நடத்துக்காட்டலைனுதான் சொல்லனும்….

கதை மற்றும் முருகதாஸ்-
லாஜிக் ஓட்டைகள் பல இருந்தாலும் அப்படிலாம் இல்லைனா டாக்குமெண்ட்ரி படமாதிரி இருக்குனு இந்த வாய்தான் சொல்லும். சமூகத்தில் ஒரு முக்கியமான பிரச்சனை யாரும் கண்டுகொள்ளாத பிரச்சனை, தூள், தண்ணீர் தண்ணீர் போன்ற படங்களில் ஏற்கனவே கையாண்ட கதைக்களம்தான் என்றாலும் ஒரு சமூகப்பிரச்சனையை ரசிக்கும் அளவு பல திருப்பங்களுடன் முருகதாஸ் தனக்கான ஸ்டைலில் சொல்லி பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

முருகதாஸின் ஸ்டைலில் முக்கியமானது கடைசிகட்ட காட்சிகளில் அனைவரையும் சீட்டின் நுனியில் உடகார வைத்து விடுவார். இதில் அனிரூத்தின் சொதப்பல் பின்னணி இசையையும் மீறி அந்த ஏரி குழாய் போராட்டத்தில் ஹைய் டெம்பர்ல போய்டே இருக்கிறார் இயக்குனர்… அப்புறம் வயதானவங்களை எல்லாம் பயன்படுத்தியது இயக்குனரின் சமுதாய பார்வைக்கு ஒரு சான்று.. ஒரு சில சீன்ல நிமிர்ந்து நில் நினைவுக்கு வந்தது….

வசனம்-
கத்திப்படத்தின் கத்தி வசனம்தான் ஷார்ப்பான வசனங்கள் அனைவரையும் சிந்திக்க தூண்டும் வசனங்கள் படத்தின் அடுத்த ஹீரோ. விஜய் பிரஸ்மீட்ல பேசும் போது ஒவ்வொரு வசனமும் செம மாஸ்… கை தட்டல் பரக்கும் காட்சிகள் அது. அதில் எல்லா பிரச்சனையையும் பேசும் போது மீத்தேன் பற்றி சொல்லுவாய் வாய்ப்பிருந்தால் நண்பர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மீடியாக்களை கேட்கும் கேள்விகள் நருக் சுருக்… அந்த சீன்ல வருவது நம் ஊர் கரார்னு நினைக்கிறேன். Aranthai KRajagopal

வில்லன் நீல் நிதின் முகேஷ்-
நிறையபேருக்கு இவர் யாருனே தெரியல இவர் வெளிநாட்டுகாரர்லாம் இல்ல இந்தியாதான் பாலிவுட்ல ஒரு குறிப்பிடத்தக்க ஹீரோ குழந்தை நட்சத்திரம் முதல் நடித்துக்கொண்டிருப்பவர். விக்ரமோட டேவிட் படத்திலும் நடித்திருக்கிறார். வில்லத்தன எக்ஸ்விரசன்லாம் சூப்பர் ஆனா இவருக்கு வாய்ப்பில்லை… வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வில்லக்கதாபாத்திரம் போலவே டம்மியாக்கப்பட்ட கதாபாத்திரம்

கேமராமேன்- வில்லியம்ஸ்
இவரு ராஜா ராணி கேமரா மேன்தானானு சந்தேகமாக இருக்கிறது. சொதப்பல்களில் கேமிராவும் ஒன்ற பாடல்களில் சரியாக கேமராவை கையாண்டவர் கதைக்களத்தில் தவற விட்டிருக்கிறார். ஒரு கிராமத்தையம் அவர்களின் வறட்சியையும் கேமராவில் சரியாக கையாளவில்லை.

மேலும் விஜய் தனியா எந்த ஹீரோயிசமும் செய்ய வாய்ப்பில்லை. அவரோட எக்ஸ்பிரசனதான் மாஸா காட்டியாகனும் சொல்லப்போனால் விஜயை அழகாக காட்டியவர் கேமிராவால் ஒரு மாஸ் கிரியேட் பண்ண தெரியலைனுதான் சொல்லனும்.

இன்டர்வல் சீன் இதே சீன் துப்பாக்கிலையும் வரும் இரண்டிலும் ஒரே டயலாக்தான் துப்பாக்கில டயலாக்க சொல்லி முடிச்சதும் விஜயையோட கண் ஒரு ஷார்ப்பா காட்டி ஒரு பக்கம் ஷேடோ விழுந்தமாதிரி காட்டியிருப்பார் சந்தோஷ்சிவன் செம மாஸ் சீன். ஆனா இதுல அதே சீனா சும்மா லோ ஆங்கிள்ல எடுத்து ஒரு விறுவிறுப்பே இல்லாம இருக்கும்….

அதேபோல் விஜய் குழாய்யிலிருந்து மேலே எழும்பொழுதும் ஒரு டெம்பர் இல்லை.

குழாயில் தலைகீழாக ரொடேட் செய்து விஜய் குளோசப்பில் செல்லும் காட்சியில் இவர் திறமையை காட்டியிருக்கிறார். எங்கோ காப்பியடிக்கப்பட்டதாக இருந்தாலும் நல்லா இருந்தது.

அனிரூத்-

திரைப்படத்தில் பெரிய பிளஸ்ஸாக நினைக்கப்பட்டவர். டிரைலர் தீம் மீயுசிக்கால் எதிபார்ப்பை ஏற்படுத்தியவர். படத்தின் பெரிய மைனஸ் இவர்தான். விஜயின் மொக்கை படங்களிலும் அவரில் ஆல்பங்கள் சூப்பரா இருக்கும். விஜய் படங்களில் மொக்கை ஆல்பம் இதுவாகதான் இருக்கும். செல்பிபுல்ல பாடல் மட்டுமே விஜயின் குரலில் நன்றாக உள்ளது… அதற்கு அடுத்து மனதில் நிற்கும் பாட்டு “யாரு பெத்த புள்ளையோ”. விஜய் படத்தில் ஓபனிங்க சாங் அட்லீஸ்ட் கேட்டிருக்கியா இல்லையா அனிரூத் … இதில் ஓபனிங்சாங் அத கேட்டதவிட பார்க்கும் போது ரொம்ப கடுப்பா இருக்குயா…

பின்னணி இசைனா என்னனு கேட்கற அளவிற்கு இசையமைத்து எரிச்சலடைய செய்திருக்கிறார். காப்பியடிச்சாலும் தேவா சூப்பரா போடுவாருப்பா பாட்சா படத்தயாவது பாருயா…

எப்ப பார்த்தாலும் அந்த தீம் மீயுசிக்கயே பயன்படுத்துகிறார்… அது 2மேப் சீன,; குழாய் சீன்;களில் மட்டுமே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

சூப்பர் கான்செப்டான அந்த காசு சுண்டிவிடுற சண்டைக்காட்சியின் விறுவிறுப்பையே தனது பின்னணி இசையால் குறைத்து விடுகிறார். சண்டைக்காட்சிகளில் ஏன்யா பின்னணி இசை ஹாலிவுட் படத்திலயே சேசிங் சீன்ஸ்ல மட்டும்தான்யா போடுவானுக.

தமிழ்நாடே ஹீரோ குழாயிலிருந்து வெளிய வருவதை எதிர்பார்த்திட்டிருக்காங்க வில்லன் அவன் வெளிய வரமாட்டானு இருக்கான் வெளிய தலைய காட்டும்போது உன் மியுசிக்லயே நீ அப்படியே டாப் கியர போட்டு தூக்கியிருக்க வேண்டாமா. அட போயா… வேலையில்ல பட்டதாரில நல்லா தனயா பண்ணிருந்த…. ரொம்ப நல்லா பண்றேன்னு கோட்ட விட்டுட்டியோ…

அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்து ஒரு முக்கியமான பிரச்சனையை மாஸ் ஹீரோவைக் கொண்டு சரியாக கையாண்டு மிக்பெரிய வெற்றியையும் முருகதாஸ் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்….

எம்என்சி கம்பெனி வந்து எல்லா விளைநிலங்களையும் ஆக்கிரமிக்கிறது என்பது உண்மைதான்… எங்க ஊர்லையும் விளைநிலங்கலெல்லாம் காணவில்லை ஆனா எம்என்சி கம்பெனியும் இல்லை…

சமூப்பிரச்சனைக்காக அதிகமாக சத்தம் போட்டு நம்மை குத்திக்காட்டிவிட்டும் சென்றிருக்கிறது

கத்தி – கூர்மை

4/5

Thursday, October 23, 2014

எந்திரமயமான தீபாவளி கொண்டாட்டங்கள்...

முன்னெல்லாம தீபாவளினா ஒரு வாரமாவே ஒரு ஆவலோடு இருப்பாங்க அது மட்டும் இல்லாம தீபாவளி அன்றைக்கு அனைவரும் ஆனந்தமா கொண்டாடுவாங்க..
இப்பவும் எல்லாரும் ஹேப்பியாதான் இருக்காங்க ஆனா அதற்கான காத்திருப்பு கொண்டாட்டம் கொஞ்சம் குறைவாதான் இருக்கு...
காரணம் - முன்னெல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்குதான் எல்லாரும் டிரெஸ் எடுப்பாங்க அந்த டிரெஸ்ஸ போட்டுட்டு வெளிய வரும்போது ஒரு ஆனந்தம் அந்த சந்தோசமே தனி...
ஆனா இப்ப குறைந்தது ஒரு 6 மாதத்திற்கு ஒரு முறையாவது டிரெஸ் எடுத்திடுறோம்...
அது போல் பலகாரம்- கேஸ் அடுப்பு இல்லாம விறகு அடுப்பிலேயே பல வகையான பலகாரங்கள் செய்து பக்கத்து வீட்டில் நண்பர்களுக்கு கொடுக்கும் போது. நம்ம வீட்ல செய்தது எல்லாரும் நல்லா இருக்கனும்னு சொல்லனும்னு ஒரு ஆவலோட ஆனந்தத்தோட கொடுப்போம்... நண்பரும் அதை ஆவலுடன் வாங்க நம்ம வீட்டு பலகாரத்தில் என்னென் அயிட்டம் என்ன ஸ்பெசல்னு பார்ப்பார்...
இப்ப கேஸ் அடுப்பே இருந்தாலும் பலகாரம்கரது பேக்கரி அயிட்டம்தான் அது நல்லா இருக்குனு சொல்லனும்னு யாரும் விரும்பமாட்டோம் ஒரு சம்பிரதாயமா கொடுப்போம்...
நாம கொண்டுபோய் கொடுப்பவரும் ஒரு ஆவலோட வாங்கமாட்டார்....
அப்ப பொதிகை டிவி மட்டும்தான் அந்த புரோகிராம்ஸ அவ்வளவா விரும்பி பார்க்க மாட்டோம்...
இப்ப பேக்கரில வாங்கிட்டு வந்த பலகாரமா இருந்தாலும் பசங்களிடம் இதை கொண்டு போய் கொடுத்திட்டு வாங்கப்பானு சொன்னா...
அட இருமா தலைவர் பேசுரார் தலைவலி பேசுறார்னு போகமாட்ராங்க...
எங்க ஏரியாவில் தீபாவளி அன்றைக்க நடந்து போனா ரோடே தெரியாது பேப்பராதான் இருக்கும்...
இப்ப அப்படி யாரும் கொண்டாடுறதா தெரியல ...
இப்ப குழந்தைகளுக்கான விழாவாகவும் ஒரு சம்பிரதாய கொண்டாட்டமாகவுமே தீபாவளி கடந்து செல்கிறது...
இப்படி கொண்டாடுற தீபாவளியாவது மிச்சம் இருக்கட்டும்...
வரும் காலங்களில் ஆன்ராய்டு போன்ல பட்டாச விட்டுட்டு இன்பாக்ஸ்ல வந்து ஸ்வீட்ட போட்டுட்டு (போட்டாவா) போகம இருந்தா சரி

Tuesday, September 30, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்
-----------------------------------------------
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அட இவ்வளவு எளிமையா ரசிக்கும் படி ஒரு படம் எடுக்கமுடியுமா என ரசிக்க வைத்த இயக்குனர் இரஞ்சித்தின் அடுத்த படம்.

கதை- பல திரைப்படங்களில் பார்த்த கதை. நண்பன், அரசியல்வாதிகள் , ஏரியா, காதலி, சண்டை கிளைமாக்ஸ் அவ்வளவுதான்...

ஆனா அதை அப்படியே நேட்டிவிட்டியோடு அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். பல திரைப்படங்களில் வட சென்னையை ரௌடிகளை காட்டும் போது மட்டுமே காட்டுவார்கள். ஆனால் இதில் வடசென்னை கவுசின் போர்ட்லிலேயே படம் முழுவதையும் முடித்துவிடுகிறார்கள். நேட்டிவிட்டியே படத்தை பார்க்க தூண்டுகிறது.

கல்லையே நடிக்க வைத்தார் பாரதிராஜா... இரஞ்சித் ஒரு சுவரையே மெயின் கதாப்பாத்திரமாக நடிக்கவைத்திருக்கிறார்... இந்த சுவர்தான் கதையே

கார்த்தி - பல பல்புகளை வாங்கியபின் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். மற்ற படங்களை விட இதில் பருத்திவீரன் அளவிற்கு சிரத்தை எடுத்திருக்கிறார். ஆனால் சுட்டு போட்டாலும் இவருக்கு இந்த மெட்ராஸ் பாஸை வரமாட்டேங்குது... அதுக்கு சும்மாவே தமிழ் பேசியிருக்கலாம்... அந்த வெகுளித்தனமாக பல்லைக்காட்டுவதில் இவர் அண்ணை பார்க்க கடுப்பானாலும் இவருக்கு செட்டாகுது...
கமலுக்க பிறகு மெட்ராஸ் தமிழ் கரெக்டா செட்டாகி இருப்பது விஜய் சேதுபதிக்குதான் பல இடங்களில் ச்சே! விஜய் சேதுபதி பண்ணிருந்தா இந்த சீன் சூப்பாரா இருக்கும்னு என்று தோன்றுகிறது. படம் முழுவதும் இவர்தான் கதையை கொண்டு செல்கிறார் ஆனா அமர்ந்திருப்பவர்கள் இவருக்காக அமர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை...

அப்ப யாருக்கு படம்?

கலையரசன்- அன்பு என்ற கேரக்டரில் அவ்வளவு ஒரு இயல்பான நடிப்பு (இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த)... தனது ஆசாத்திய நடிப்பால் கார்த்தியை ஓரங்கட்டிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்... வடசென்னை வாழ் இளைஞனை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார்... மௌனராகம் கார்த்திக், நீ வருவாய் என அஜித் போல் நல்ல கதாப்பாத்திரம் ...  கார்த்தியையும் பாராட்டியே ஆகவேண்டும் தன்னை விட ஆதிக ஸ்கோப் இந்த கேரக்கருக்குதான் என்று தெரிந்தும் நடிக்க சம்மதிதிருக்கிறார்...

அந்த கதாப்பாத்திரம் இல்லாமலே பார்வையாளர்கள் பிற்பாதி முழுவதும் அந்த காதாபாத்திரத்தை நினைவு கூறுவதிலும் சரி....படம் முடிந்து வெளியே வரும் போதும் அனைவரும் அன்பு கேரக்டர் பற்றிதான் பேசும் அளவிற்கு இயல்பான நடிப்பு ...

ஹீரோயின் கேத்தரின் தெரசா- எல்லாரும் அட இதுவா ஹீரொயின் என்னடா டம்மி ....... அப்படினு ஆரம்பத்தில் யோசித்தாலும் வடசென்னை வாழ் ஹீரோயின் என்பதற்கு சரியான தேர்வு நன்றாக நடித்திருக்கிறார்.... கார்த்தி மெட்ராஸ் தமிழும் நல்ல தமிழும் கலந்து டயலாக் பேசும்போது இந்த புள்ள கரெக்டா மெட்ராஸ் தமிழ் (டப்பிங் ஆர்டிஸ்டுக்கே இந்த பாராட்டு) பேசுறது ஏதோ கார்த்திய கலாய்கிறமாதிரி இருக்கு...

ஜானி- கார்த்தியை விட அன்பிற்கு அடுத்து கவனிக்கப்பட வைத்த கேரக்டர் ஜானி இவர் மாதிரி எல்லா ஊர்லயும் எல்லா ஏரியலவும் பெரும்பாலும் ஒருத்தர் இருப்பார் வெகு இயல்பாக செய்திருக்கிறார்...

கார்த்திக்கு அம்மா, அப்பா, பாட்டி, அன்புக்கு மனைவியா வர்ர புல்ல வில்லன் எல்லா கேரக்டரும் கரெக்கடா பொருந்தியிருக்காங்க கார்த்தியை தவிர கார்த்தியை பார்த்து பார்த்து அப்படியே பழகிடுறோம் அவ்வளவுதான்...

இசை இந்த படத்துக்கு இவ்வளவு போதும் என்ற அளவிற்கு இருக்கிறது.. ஆனால் இது போன்ற கதைகளுக்கு பின்னணி இசைதான் முக்கியம் இது போன்ற கதைகளுக்கு வில்லன் பைட் அப்படியே தெரிக்க விட் வேண்டாமா... அந்த சுவர காட்டும் போதே ஒரு பயம் வரும் அளவிற்கு இன்னும் முயன்றிருக்கலாம்.... பரவாயில்லை ....

நன்றிப்பா பாட்டுனதும் பாரின் போகலை...

கேமிராமேன் முரளி- வட சென்னை ஹவுசிங்க யூனிட் எல்லாம் அழகாக காட்டியிருக்கிறார்... ஒரு சீன்ல கார்த்திக் பின்னாடி அப்படியே நிழல் உயரமாகும் செம மாஸ் (ஆனா என்ன நிழல் இருக்க பக்கம் தான் லைட் இருக்கும் கேமரா பக்கம் இருட்டாதான் இருக்கும்)

கிளைமாக்ஸ் எப்படியாவது முடிக்கனும் வேற வழியில்ல சண்டக்கோழி, நான் மகான் அல்ல படங்கள் கைகொடுக்க ஒரு வழியாக வில்லனை கொன்று படத்தை முடித்துவிடுகிறார்... இது மட்டும் கொஞ்சம் சொதப்பல் ... வேற வழியும் இல்ல...

மெட்ராஸ்- வடசென்னை மாஸ்
 இயக்குனர் அட்டகத்தி இரஞ்சித்தின் அடுத்த வெற்றிக்கத்தி

3.8/5

Monday, July 21, 2014

சதுரங்க வேட்டை - இதற்கு முன் எத்தனையோ சினிமாக்களில் நாம் திருட்டை பற்றிபார்த்திருப்போம் அவை பிட்பாக்கெட், பீரோபுல்லிங், கொலை கொள்ளை போன்ற அடிக்கடி கேள்விப்பட்ட விசயங்களையும் அல்லது நாம் சற்றும் எதிர்பார்க்காத நடந்திராக இன்டெலிஜென்ட் வகையென்று சொல்லப்படும் திருட்டுக்களையும் தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் இதுவரை யாரும் சொல்லத் துணியாத சொல்லாத திருட்டுவகைகளை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் இவை அன்றாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருட்டுகள்தான் சொல்லப்போனால் நம் நண்பரோ உறவினரோ இந்த திருட்டில் பாதிக்கப்பட்டிருப்பர். பலர் கௌரவத்தை காரணம் காட்டி இதை வெளியில் சொல்லாமலும் இருப்பர். மேலும் நமது மீடியாக்கள் இந்த வகையான திருட்டிற்கு வைத்திருக்கும் பெயர் மோசடி. கதைநாயகன் நட்ராஜ் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரக்டாின் தன்மை புாிந்து நடித்திருக்கிறார். மக்களை ஏமாற்ற அவர் செய்யும் ஒவ்வொரு மோசடி வேலைக்கும் நடிப்பில் ரசிகர்களிடம் சபாஷ் வாங்குகிறார். இளவரசு, பொன்வண்ணன், ஹீரோயின் உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் குறிப்பாக தூய தமிழ் பேசும் வில்லன் கவனிக்கசெய்கிறார். ஒளிபதிவு இசை என அனைத்தும் படத்திற்கு போதுமான அளவு செய்திருக்கிறார்கள். வைரமுத்துவின் வரிகள் அருமை "வெறித்தோடி போனது வாழ்க்கை” என்று ஒரு சிறு இடைவேளைக்கு பின் தத்துவ வாிகளை தந்திருக்கிறார்... திரைப்படத்தின் மெயின் ஹீரோ வசனம் ஒவ்வொரு வசனமும் தீப்பொறிதான்... மற்றும் நடைமுறை சமூகத்துடனும் ஒத்திருக்கிறது.. நெகடிவ்வான ஒரு கதைகளத்தை தேர்ந்தெடுத்து அதில் விரசமான பாடல்களோ சீன்களோ இல்லாமல் சொல்லப்போனால் ஹீரோ சண்டையேபோடாமல் ஹீரோயிசத்தையும் காட்டியிருக்கிறார். இயக்குனர். ஒவ்வொரு காட்சிகளிலும் இயக்குனரின் திறமையும் தெளிவும் தொிகிறது. முழுக்கமுழுக்க கதையின் மேல் நம்பிக்கை வைத்து ஜெயித்தும் இருக்கிறார்கள்.. இயக்குனருக்கு பாராட்டுகள்... குறையும் நிறையும்.. பிரபலமான ஹீரோ இல்லாததால்

July 21, 2014 at 10:03PM via Facebook

Saturday, July 19, 2014

வேலையில்லா பட்டதாாி தனுஷின் ஹீரோயிச வேலை

வேலையில்லா பட்டதாாி
--------------------------------------

முந்தைய படங்கள் அப்படி இப்படி வெற்றினு சொல்லி பெரும் டாலும் ஒரு நிலையான வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் தனுஷ் எல்லாதிரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்துவிடுவார் இதிலும் தவறவில்லை சிறப்பாக செய்திருக்கிறார். கதை தேர்விலும் சாி. அவருக்கு பொருத்தமான கதாபாத்திரம்.

சமுத்திரக்கனி எதிர்பார்க்காத கதாபாத்திரம் முதல் ஒன்றிரண்டு காட்சிகளில் அவரை தனுஷின் அப்பாவாக ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வது சிரமம் அடுத்தடுத்து தனது அழுத்தமான குரல்வளத்தால் அனைவரையும் கவருகிறார் மேலும் இவரது காதபாத்திரம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

சரண்யா பொன்வன்னன் இவங்கள விட்டா அம்மா கேரக்டர் செய்ய இப்ப ஆள் இல்லை. சொல்லப்போனால் மனோரமா ஆச்சிக்கு அடுத்து இவங்கதான்.

வேலையில்லாம வெட்டியாக சுற்றும் பசங்களை சினிமாவில் மட்டும் லைவ் பண்ற பக்கத்து வீட்டு பெண். தேவையான அளவு நடத்திருக்கிறார்.

டைரக்டர் ரொம்ப நல்லவர்போல இல்லை திருமணம் ஆகிவிட்டது என்ற மனிதாபிமானமானு தெரியவில்லை ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப ”நடித்துக்காட்ட” வாய்ப்பு வழங்கவில்லை.

அனிருத் இசை எப்பவும் போல படம் ஓடும் வரை ஹிட்.
நிச்சயம் இந்த பாடல்கள் தொடர்ந்த கேட்கமுடியாது...
அதேபோல் தனுஷே பெரும்பாலான பாடல்களை பாடியுள்ளார்.
நல்லாதான் இருக்கு. ஆனா தனுஷின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல...

அனிருத்தையும் அதிகப்படியான பாடல்களை தனுஷ் பாடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்...

கதைனு சொல்லலாம்னா மற்ற படங்களில் ஹீரோ உதாரியாக திரிவார் தம் அடிப்பார் தண்ணியடிப்பார். அப்பறம் திருந்திவிடுவார் படம் சுபம்னு முடியும்.

ஆனா இதில் ஹீரோ வெட்டியா சும்மா தண்ணி தம்முனு திரியறார். அம்மா இறப்பிற்கு பின் அம்மா தம் அடிக்க கூடாதுனு சொன்னாங்கனு சொல்றாா் சாி இதற்கு பிறகு சில தவறுகளை ஹீரோ திருத்திக்கொள்வார் என்று நினைத்தால் திரும்பவும் வாயில் சிகரட்டுடனே ஹீரோ திரிகிறார். ஒரு சில இடங்களில் ”சிகரெட் உடல்நலத்திற்கு தீங்கானது”னு ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்கு போடுறத கூட டைரக்டர் லேட்டா தான் போட்டிருக்கிறார்.

அப்ப இன்ஜினியாிங் படிச்சவன் இப்படி தண்ணி தம்முமாதான் திரிவானுக அப்படினு கடைசி வரை அதையே சொன்ன அந்த டைரக்டர்க்கு என் சார்பா ”பெரும் கண்டணம்”.

அப்பறம் இந்த தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தில் என்ன சொல்லவரானுகனே தெரியாம

அப்பாவை எதிர்த்து பேசும் போதும்
தண்ணி தம் அடிக்கும் போதும்
ஹீரோயின காட்டும் போதும் மட்டும்

கைதட்டல் விசில் அடிப்பவர்கள் அதில் வந்த ஒன்றிரண்டு நல்ல வசனங்களுக்கு சும்மாதான் உட்கார்ந்திருந்தாங்க... இவங்க உருப்படதாதவிட தனுஷ உருப்படியா ஒரு நல்ல படம் கொடுக்கவிடமாட்டாங்க..

காமெடி டைம்ஸ்
--------------------------
வசனங்களை பெரும்பாலும் ரஜினி மாடுலேசனில் பேசுவதும்
கிளைமாக்சில் சட்டைகழட்டி சண்டைபோடுவதும் (ஏற்கனவே படையப்பாலயே சிரிச்சாச்சிபா...)
தனுஷ்ரசிகர்களின் கைத்தட்களுக்கு நடுவே பலரின் சிரிப்பு சத்தங்களும் அடங்கும்...

என்ன விவேக் பத்தி சொல்லலனு நினைக்கறீங்களா அவரோட கேரக்டரும் அப்படிதான் நினைவில் நிற்காது அவ்வளவு வெயிட்டான கேரக்டர்.

வேலையில்ல பட்டாரி (படத்தின் டைரக்கர்) ஒருவருக்கு வேலை கொடுத்திருக்கும் படம்.

தனுஷ் ரசிகர்கள்னு யாரும் உட்காராத ஷோவா பார்த்து போன படம் பார்க்கலாம்...
தனுஷின் வெற்றி படங்கள் லிட்டில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

3/5



Saturday, May 3, 2014

Tamil Nadu Engineering Admissions ( TNEA - 2014 )

Tamil Nadu Engineering Admissions
( TNEA - 2014 )


விண்ணப்பகட்டணம்    ரூ.500  for General category ரூ.250 for SC/SCA/ST belongs to Tamil Nadu

                                                       பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் குறித்துக்கொள்ள வேண்டிய முக்கிய நாட்கள்

Schedule of Events


S.NoEventsDates
1.Issue of notification inviting application for
Admission to B.E./B.Tech.
02.05.2014
2.Issue of application forms விண்ணப்ப வினியோகம்03.05.2014
3.Last date for issue of application form விண்ணப்ப வினியோகம் கடைசி நாள்20.05.2014
4.Last date for submission of filled-in applications பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி20.05.2014
5.Assigning Random NumberTo Be Announced Later
6.Publication of Rank List
7.Commencement of Counselling3rd Week of June


விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ்காணும் சான்றிதழ்களை பல்கலைக்கழகம் கொடுத்திருக்கும் சான்றிதழ் வடிவிலேயே பெற்றிருக்க வேண்டும்

Nativity Certificate குடியிருப்பு சான்றிதழ்

First Graduate tuition fee exemption முதல்நிலைப்பட்டதாரி சான்றிதழ்
குடும்பத்தில் நீங்கள் தான் முதல்முறையாக பட்டாதாரிக்கு படிக்கிறீர்கள் என்றால் தங்களுக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை கிடைக்க இந்த சான்றிதழை கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

Special Reservation சிறப்பு இடஒதுக்கீடு

முன்னால் ராணுவத்தினர்
தியாகிகளின் வாரிசுகள்
மாற்றுத்திறனாளிகள்
Download
Download
Download

மேலும் விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தை பார்க்கவும்

கவனத்தைக் கவரும் கடல்சார் படிப்புகள்

கவனத்தைக்
கவரும் கடல்சார்
படிப்புகள்!

உலகின் மிகப்பெரிய சொத்து கடல்.
பல்வேறு வகையான உயிரினங்களின்
வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத
பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன.
பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும்,
போக்குவரத்துக்கும் கடல்
பயன்படுகிறது.
உலகின் மிகப்பெரிய சொத்து கடல்.
பல்வேறு வகையான
உயிரினங்களின் வாழிடம் அது.
நிலத்தில் கிடைக்காத பல அரிய
வளங்கள் கடலில் இருக்கின்றன.
பல்வேறு வகையான
வர்த்தகத்துக்கும்,
போக்குவரத்துக்கும் கடல்
பயன்படுகிறது. மீன்பிடித்தல்,
துறைமுகப் பணிகள், கப்பல்
பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள்,
கடல் வணிக மேலாண்மை என
கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம்.
தமிழகத்திலும், பிற
மாநிலங்களிலும் கடல் சார்ந்த
பொருளாதார
மேம்பாட்டு நடவடிக்கைகள்,
தொழிற்சாலைகள், துறைமுகங்கள்,
மீன்பிடி தொழில், சுற்றுலா,
தாதுவளம் பயன்பாடு,
உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகிறது.
குறிப்பாக தமிழக
கடற்கரை பகுதிகளில் கடற்பாசி,
கடற்புல், கடல் தாவரங்கள்
உள்ளிட்டவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும்
பொக்கிஷமாக உள்ளன.
கடல்சார் துறைகளில் தாரளமான
வேலைவாய்ப்பு இருக்கிறது. கடல்
தொடர்பான வேலைகளுக்குப்
படிக்கும் படிப்புகளை கடல் சார்
படிப்புகள் என்று அடக்கினாலும்,
அதில் பலவகையான பிரிவுகள்
இருக்கின்றன.
அவ்வப்போது புதிது புதிதாகப்
பல்வேறு துறைகள்
வந்துகொண்டும் இருக்கின்றன.
இதில் விசேஷம் என்னவென்றால்,
கடல்சார் படிப்புகளுக்கு அதிக
வேலை வாய்ப்பு இருப்பதுடன்,
ஊதியமும் மற்ற துறைகளைக்
காட்டிலும் மிக
அதிகமாகவே இருக்கிறது. கடல்சார்
படிப்புகளில் மிகவும் அதிக
வேலைவாய்ப்பைப் பெற்றுத்
தருவதும், பிரபலமானதும்
மெரைன் என்ஜினியரிங் எனப்படும்
கடல்சார் பொறியியல் படிப்பாகும்.
கடந்த பல வருடங்களாகவே, இந்தப்
படிப்பில் மாணவர்களின் ஆர்வம்
பெருமளவில்
அதிகரித்து வந்திருக்கிறது.
அந்த படிப்பு தற்போது பல
பொறியியல் கல்லூரிகளில்
பாடப்பிரிவாக
இருந்து கற்றுகொடுக்கப்பட்டாலும்,
அந்தப் படிப்பிற்கென்றே சில
பிரத்யேக கல்வி நிறுவனங்கள்
இருக்கின்றன. அவற்றில் மிக
முக்கியமானதும்
தலைமையானதும் சென்னையில்
அமைந்துள்ள மத்திய கடல்சார்
பல்கலைக்கழகம். இந்தியாவில்
கடல்சார்
படிப்புகளுக்கென்று பல்கலைக்கழகம்
வேண்டும் என்கிற
கோரிக்கை கடந்த 2008-ம்
ஆண்டில்தான் நிறைவேறியது.
இதற்கென நாடாளுமன்றத்தில்
பிரத்யேகச் சட்டம்
இயற்றப்பட்டு கடல்சார்
பல்கலைக்கலைக்கழம்
சென்னை உத்தண்டியில் (ராஜீவ்
காந்தி சாலை - கிழக்குக்
கடற்கரைச் சாலை இடையே)
அமைக்கப்பட்டது.
4 ஆண்டு பி.டெக். கடல்சார்
பொறியியல் மற்றும் 3
ஆண்டு பி.எஸ்சி, கப்பல் கட்டுமானம்
மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட
படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம்
வழங்குகிறது. 17 முதல் 25
வயதுக்கு உள்பட்ட 12-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
இந்தப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல்,
வேதியியல் பாடங்களில்
சராசரியாக 60 சதவீத
மதிப்பெண்களைப் பெற்றிருக்க
வேண்டும். பல்கலைக்கழகம் நடத்தும்
பொது நுழைவுத் தேர்வில்
பங்கேற்க வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம்
வரை கட்டணம் இருக்கும்.
பிஎஸ்சி படிப்பு கொச்சியில்
நடக்கும். இந்தப் பல்கலைக்கழகத்துடன்
7 முக்கிய கடல்சார்
அரசு கல்வி நிறுவனங்கள்
இணைக்கப்பட்டுள்ளன.
அவை:
1. தேசிய கடல்சார் கல்வி நிறுவனம்,
சென்னை,
2. டி.எஸ்.சாணக்யா, மும்பை.
3. லால்பகதூர் சாஸ்திரி கடல்சார்
உயர் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்
கல்லூரி, மும்பை.
4. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சிக்
கல்வி நிறுவனம், மும்பை.
5. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சிக்
கல்வி நிறுவனம்.
6. கொல்கத்தா, இந்திய துறைமுக
மேலாண்மைக் கல்வி நிறுவனம்.
7. தேசிய கப்பல்
வடிவமைப்பு மற்றும்
ஆராய்ச்சி மையம், விசாகப்பட்டினம்.
இவை தவிர கொச்சியில் இந்திய
கடல்சார் பல்கலைக்கழக வளாகம்
அமைந்துள்ளது
கடல்சார் பல்கலைக்கழகத்துடன்
ஒருங்கிணைக்கப்பட்ட
அரசு கல்வி நிறுவனங்களில்
கற்றுத்தரப்படும் படிப்புகள்
அனைத்துக்கும் உடனடியாக
வேலைவாய்ப்புக் கிடைக்கிறது.
கடல்சார்ந்த
அனைத்துத்துறைகளிலும்
இளநிலை மற்றும் முதுநிலைப்
பட்டப்படிப்புகள், ஆராய்ச்சிப்
படிப்புகள்,
குறுகியகாலப்படிப்புகள் இந்தக்
கல்வி நிறுவனங்களில் கற்றுத்
தரப்படுகின்றன.
பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள
படிப்புகளை எட்டுத் துறைகளாகப்
பிரிக்கலாம்.
1. துறைமுக மேலாண்மை
2. கப்பல் செலுத்தும் அறிவியல்
3. கடல்சார் பொறியியல்
4. போக்குவரத்து மற்றும்
சரக்கு கையாளுதல் (வணி
கக் கல்வி நிறுவனம்)
5. கடல்சார் அறிவியல்
6. கடல்சார் சட்டங்கள்
7. கடற்கட்டுமானம் மற்றும் கப்பல்
கட்டுதல்
8. உள்நாட்டு நீர்வழிப்
போக்குவரத்து
தேசிய கடல்சார் கல்வி நிறுவனம்,
சென்னை.
உத்தண்டியில் அமைந்துள்ள
கடல்சார் பல்கலைக் கழக வளாகத்தில்
இது அமைந்திருக்கிறது. 1985-ம்
ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும்
இந்தக் கல்வி நிறுவனம் கடல்சார்ந்த
மற்றும் துறைமுகம் சார்ந்த
பயிற்சிகளை வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள பெரிய
துறைமுகங்கள், சிறிய
துறைமுகங்கள், கடல்சார் வர்த்தகம்,
கடல்சார் வாரியங்கள் ஆகியவற்றைச்
சேர்ந்தவர்களுக்கு மட்டுமே துறைமுகம்
சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
இவை தவிர கடல்சார் பொறியியல்
சம்பந்தமாக 4 வருட பி.டெக்.
படிப்பும் கற்றுத் தரப்படுகிறது.
இதற்கான மாணவர்
சேர்க்கை ஐ.ஐ.டி தேர்வுகள் மற்றும்
கொல்கத்தாவின் கடல்சார்
பொறியியல் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக
நடக்கிறது. ஆராய்ச்சிப்
படிப்புகளும் உண்டு.
முகவரி: தேசிய கடல்சார்
கல்வி நிறுவனம்,
கிழக்கு கடற்கரை சாலை,
உத்தண்டி,
சென்னை 600 119.
தொலைபேசி : (044) 24530343 / 345.
பேக்ஸ் : (044) 2453 0342.
மின்னஞ்சல் :
imu.chennaicampus@yahoo.com
டி.எஸ்.சாணக்யா கல்வி நிறுவனம்
அரபிக் கடலோரம் நவி மும்பையில்
டி.எஸ். சாணக்யா பயிற்சிக் கப்பல்
கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.
உலகில் தலைசிறந்த கடல்சார்
கல்வி நிறுவனங்களுள் இதுவும்
ஒன்று.
இங்கு கற்றுத்தரப்படும் படிப்புகள்:
1. பி.எஸ்சி. - கப்பல் செலுத்தும்
அறிவியல் - 3 ஆண்டுகள்
2. கப்பல் செலுத்தும் அறிவியல்
டிப்ளமா - 1 ஆண்டு
3. நவீன தீ தடுப்பு படிப்பு - 1 வாரம்
4. சர்வதேச கடல்சார் நெருக்கடிகள்
பாதுகாப்பு
அமைப்பு தொடர்பான படிப்பு - 2
வாரங்கள்
பி.எஸ்சி படிப்புக்கு ஐ.ஐ.டி.
கூட்டு நுழைவுத் தேர்வு மூலம்
மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்,
20 வயதுக்கு மேற்படாத
திருமணமாகாதவர்கள்
மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.
கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கும்
சேர்த்து ரூ.98 ஆயிரம்.
முகவரி: டி.எஸ்.
சாணக்யா கல்வி நிறுவனம்,
நியூ மும்பை, தொலைபேசி :
(022) 2770 1935 / 2770 3876.பேக்ஸ்: (022)
2770 0398
லால்பகதூர் சாஸ்திரி கல்லூரி-
கடல்சார் உயர் படிப்புகள் மற்றும்
ஆராய்ச்சி கல்வி நிறுவனம்:
மும்பையில் 1948-ல் தொடங்கப்பட்டது.
உலகளவில் கடல்சார் உயர்
படிப்புகளுக்கான பெரிய
கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.
இதில் 1200 மாணவர்கள்
படிக்கிறார்கள். பல்வேறு கடல்சார்
துறைகளில் 46 கடல்சார் படிப்புகள்
உள்ளன. படிப்புகள் அனைத்தும்
சர்வதேச தரச் சான்று (ஐ.எம்.ஓ)
உண்டு. இக்கல்வி நிறுவனம்
கடல்சார்
அதிகாரிகளுக்கென்றே விரிவான
பயிற்சியை வழங்குகிறது.
கடல்சார்ந்த மற்றும் கப்பல்
தொழில்சார்ந்த படிப்புகளின்
அனைத்து அம்சங்களையும்
தேவைகளையும்
கருத்தில்கொண்டு, நவீன
முறையிலான
அனைத்து வசதிகளும்
இங்கு உண்டு. சர்வதேச தரத்துடன்
1984-ல் இங்கு ஆரம்பிக்கப்பட்ட
கூடுதல்
முதுநிலை படிப்பு மற்றும் 1994-ல்
ஆரம்பிக்கப்பட்ட
முதன்மை பொறியாளருக்கான
கூடுதல்
படிப்பு ஆகியவை இக்கல்லூரியின்
மற்றொரு சிறப்பம்சம். இந்தக்
கல்லூரியில் கப்பலில் உள்ளதைப்
போன்ற 7 வகையான
மாதிரி உருவாக்கிகள் உள்ளன.
இந்த உருவாக்கிகள் கடல்சார்
படிப்புகளுக்கு மிகவும்
அவசியமாகும். இவற்றைக்
கொண்டு 7 துறைகளில்
படிப்புகள் நடத்தப்படுகின்றன.
அவை:
(1) LNG - LPG Full Mission Simulator
(2) Liquid Cargo Handling Simulator
(3) Engine Room Simulator
(4) Ship Manevering simulator
(5) Radar Simulator
(6) Radar, ARPA and Navigation simulator
(7) GMDSS
முகவரி: லால்பகதூர்
சாஸ்திரி கல்லூரி- கடல்சார் உயர்
படிப்புகள் மற்றும்
ஆராய்ச்சி கல்வி நிறுவனம்
ஹை பந்தர் சாலை, மும்பை 400 033.
தொலைபேசி : (022) 2371 9944/46,
பேக்ஸ் : (022) 2373 9784.
மின்னஞ்சல் : mariner@bom2.vsnl.net.in
கடல்சார் பொறியியல் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் - மும்பை:
மெக்கானிகல் என்ஜினியரிங்
மற்றும் நேவல் ஆர்கிடெக்சர் போன்ற
துறைகளில் பட்டம்
பெற்றோருக்கு ஒரு ஆண்டு கடல்சார்
படிப்பை இந்த நிறுவனம்
வழங்குகிறது.
ஏற்கெனவே பொறியியல்
படிப்பை முடித்தவர்கள் இந்தக்
கடல்சார் படிப்பையும் முடித்தால்
கடல்சார் பொறியாளராகலாம். இந்த
ஒரு வருடப் படிப்பானது,
கல்லூரியில் 6 மாதமும், கப்பலில் 6
மாதமும் நடைபெறும்.
கப்பல் செலுத்தும்
அறிவியலுக்கான (நாட்டிகல்
ஸயன்ஸ்) 3 வருட பி.எஸ்.சி படிப்பும்
உண்டு. இதற்கான மாணவர்
தேர்வும் ஐ.ஐ.டி நுழைவுத்
தேர்வு மூலமே நடைபெறும்.
இப்படிப்பை முடித்தவர் நாட்டிக்கல்
அறிவியல் மற்றும் கடல்சார்
பொறியியல் ஆகிய 2
துறைகளிலும் தேர்ந்தவராக
இருப்பார். இந்த
பி.எஸ்சி படிப்பை முடித்தவர்கள், 18
மாத கடல்சார் மற்றும் கப்பல்
போக்குவரத்து பயிற்சியில்
கலந்து கொள்ள
வேண்டியது கட்டாயம்.
முகவரி:
கடல்சார் பொறியியல் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் (எம்இஆர்ஐ)
ஹை பந்தர் சாலை, மும்பை - 400
033.
தொலைபேசி : (022) 2377 6136 / 2372
5987 / 2377 1181
பேக்ஸ் : (022) 2375 3151.
மின்னஞ்சல் : meribom@vsnl.com
கடல்சார் பொறியியல் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் - கொல்கத்தா
கடல்சார் பொறியியல்
படிப்புகளை வழங்குவதில்
முதன்மையான கல்வி நிறுவனம்
கொல்கத்தாவில் உள்ள கடல்சார்
பொறியியல் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனமாகும்.
சுருக்கமாக மேரி (ஙஉதஐ) கடல்சார்
பொறியியல் பயிற்சி இயக்குநரகம்
என்ற பெயரில் முன்னதாக இந்த
நிறுவனம் இயங்கி வந்தது.
இங்கு படிக்கும் அனைவருக்கும்
உடனடியாக
வேலை கிடைத்துவிடும்
என்பது இந்த கல்வி நிறுவனத்தின்
சிறப்பம்சமாகும். கடல்சார்
பொறியியல் படிப்பு படிக்க
நினைக்கும் அனைவருக்கும்
இருக்கும் முதன்மையான
குறிக்கோள்
இங்கு படிப்பதாகத்தான் இருக்கும்.
இன்றைக்கு உலகின் தலைசிறந்த
கடல்சார் கல்வி நிறுவனங்களில்
ஒன்றாக இந்நிறுவனம்
கருதப்படுகிறது.
எந்த அளவுக்கு இந்த நிறுவனம்
பிரபலமோ அதே அளவுக்கு இங்கு இடத்தைப்
பெறுவதற்கும் போட்டி அதிகம்.
இடம்
கிடைப்பது அவ்வளவு எளிதானதல்ல.
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள்
நடத்தும் நுழைவுத் தேர்வுகளில்
பெறும் மதிப்பெண்களின்
அடிப்படையில் தான் இங்குள்ள 4
ஆண்டு கடல்சார் பொறியியல்
படிப்புக்கு இடம் கிடைக்கும்.
இந்தப் படிப்பு அருகிலுள்ள
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தால்
அங்கீகரிக்கப்பட்டது. நவீன
ஆய்வகங்கள், அனைத்து வகையான
கருவிகள் என
அனைத்து வசதிகளும் இந்த
கல்வி நிறுவனத்தில் உள்ளன.
மாணவர்களுக்கு உயர்தர
பயிற்சிகளை வழங்குவதற்கான
அனைத்து வசதிகளும்
இங்கே உள்ளன. அருகிலுள்ள
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில்,
கடல்சார் பொறியியலில் 4 வருட
பி.டெக். படிக்கும்
மாணவர்களுக்கு இது பயிற்சியளிக்கிறது.
பாடத்திட்டமானது, மெக்கானிக்ஸ்
ஆப் மெஷின்ஸ், மெடீரியல்ஸ்,
அட்வான்ஸ்ட் மேதமேடிக்ஸ்,
அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ்,
எலக்ட்ரானிக்ஸ், ப்லூயிட்
மெகானிக்ஸ் மற்றும் பிற
பொறியியல்தொழில்நுட்ப
படிப்புகள் அடங்கியவை.
இவை தவிர, கூடுதலாக நிர்வாக
சேவைகள், மேலாண்மை மற்றும்
தொழில்முனைதல் படிப்புகள்
போன்றவையும் அடக்கம். மேலும்
உடற்பயிற்சி, அணி வகுப்பு, வீட்டுப்
பராமரிப்பு, நீச்சல் மற்றும்
வெளி விளையாட்டு போன்ற
பயிற்சிகள் கடல்சார் பொறியாளர்கள்
நல்ல உடல் மற்றும் மனோதிடத்துடன்
இருப்பதற்காக அளிக்கப்படுகின்றன.
தற்போதைய நிலையில் பி.டெக்.
படிப்பில் 246 இடங்கள் உள்ளன.
இது உறைவிடக்
கல்வி நிறுவனமாகும்.
இங்கு படிக்கும் அனைவருக்கும்
கேம்பஸ் இண்டர்வியூ முறையில்
வேலை கிடைத்து விடுகிறது.
தகுதிகள்: 20 வயது நிரம்பாத
திருமணமாகாதவர்கள்
மட்டுமே மேரி நிறுவனத்தில்
கடல்சார் பொறியியல்
படிப்பதற்கு விண்ணப்பிக்க
முடியும். தாழ்த்தப்பட்ட,
பழங்குடி வகுப்பினருக்கு வயது வரம்பில்
5 ஆண்டுகள் சலுகை உண்டு.
ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத்தேர்வில்
பங்கேற்பதற்கான அனைத்துத்
தகுதிகளையும் பெற்றிருக்க
வேண்டும்.
ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு,
ஐ.ஐ.எம்.எஸ். எனப்படும் இந்திய
கடல்சார் படிப்புகளுக்கான
கல்வி நிறுவனம் நடத்தும் ஆகிய
இரு தேர்வுகளிலும் பங்கேற்க
வேண்டும். இந்த இரு தேர்விலும்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்
ஜூன் - ஜூலை மாதத்தில்
கலந்தாய்வு மற்றும் நேர்முகத்
தேர்வுகள் நடத்தப்படும். இறுதித்
தேர்வின்போது பல்வேறு உடல்
தகுதி சோதனைகளும் நடத்தப்படும்.
மருத்துவப் பரிசோதனைகள், உடல்
தகுதி சோதனைகளில்
தோல்வியுறுவோருக்கு மேரியில்
இடம் கிடைக்காது.
முகவரி: கடல்சார் பொறியியல்
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பி - 19, தரதல்லா சாலை,
கொல்கட்டா - 700 088
தொலைபேசி : (033) 2401 4673 / 76 &
78
பேக்ஸ் : (033) 2401 4333.
மின்னஞ்சல் : director@merical.ac.in
இந்திய துறைமுக
மேலாண்மை கல்வி நிறுவனம்-
கொல்கத்தா
கொல்கத்தாவின் துறைமுகம்
அருகே இந்தக் கல்வி நிறுவனம்
அமைந்துள்ளது. துறைமுகம்
சார்ந்த படிப்புகள், கடல்சார்ந்த
அதிகாரிகளுக்கான பயிற்சிகள்
ஆகியவை இங்கு அளிக்கப்படுகின்றன.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன்
இணைந்து ஓராண்டு முதுநிலை டிப்ளமா படிப்புகளையும்
இந்தக் கல்வி நிறுவனம்
வழங்குகிறது.
முகவரி: இந்திய துறைமுக
மேலாண்மை கல்வி நிறுவனம்
சுபாஷ் பவன், 2வது மாடி, 40,
சர்குலர் கார்டன் பீச் சாலை,
கொல்கட்டா - 700 043.
தொலைபேசி : (033) 2439 4123/4124
பேக்ஸ் : (033) 2439 7179 / 0097.
மின்னஞ்சல் : iipmcal@dataone.in
தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும்
ஆராய்ச்சி மையம், விசாகப்பட்டினம்
கப்பல் கட்டுமானத்துக்கான தேசிய
கல்வி நிறுவனம் இது. கப்பல்
கட்டுமானம், பழுது நீக்குதல்,
பராமரிப்பு உள்ளிட்ட
பல்வேறு கடல்சார்
படிப்புகளை இந்தக்
கல்வி நிறுவனம் வழங்குகிறது.
முகவரி:தேசிய கப்பல் கட்டுமானம்
மற்றும் ஆராய்ச்சி மையம்
காந்திகிராம், விசாகப்பட்டினம் -
530 005.
தொலைபேசி : (0891) 257 8360 / 257
8364.
பேக்ஸ் : (0891) 2577754.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்,
கொச்சி வளாகம்
கொச்சி துறைமுகத்தை ஒட்டி இந்த
வளாகம் அமைந்துள்ளது.
இங்கு நடத்தப்படும்
பல்வேறு படிப்புகள்:
1. பி.எஸ்.சி, கப்பல் பழுது நீக்குதல்
மற்றும் கட்டுமானம்
2.எம்.பி.ஏ.-துறைமுகம் மற்றும் கப்பல்
மேலாண்மை
3. கடல்சார் பொறியியல்
முதுநிலை டிப்ளமா
4. கடல் சட்டங்கள் தொடர்பான
முதுநிலைப் படிப்பு
5. ஓராண்டு கப்பல் செலுத்தும்
அறிவியல் டிப்ளமா
முகவரி:
கொச்சின் துறைமுக
பயிற்சி வளாகம்
வில்லிங்டன் தீவு, கொச்சி - 682003,
தொலைபேசி : (0484) 2668642; 2669457.
மின்னஞ்சல் : cochincampus@imu.co.in
osdcochin@imu.co.in
பிற கல்வி நிறுவனங்கள்:
பொதுவாக கடல்சார் படிப்புகள்
அனைத்தும்
கப்பல்துறை பொது இயக்குனரால்
அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த வகையில்
இந்தியா முழுவதும் 127
கல்லூரிகளுக்கு கப்பல்துறை பொது இயக்குநரகம்
அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
அவற்றுள் தமிழகத்தில் அமைந்துள்ள
28 கல்லூரிகளும் புதுச்சேரியில்
அமைந்துள்ள 2 கல்லூரிக
ளும் அடங்கும். அவை:
1. Academy of Maritime Education & Training,
Chennai
2. Balaji Seamen Training Institute, Chennai
3. Chennai School of Ship Management,
Chenn
ai
4. Chidambaram Institute of Maritime Te
chnology, Chennai
5. Cosmopolitan Technology of Maritime,
6. Hindustan Institute Of Maritime Training
Post
Sea Training Centre, Chennai
7. HIMT College Hindustan Institute Of Maritime
Training Pre-Sea Training Centre, Kancheepur
am
8. GKM College of Engineering & Technology,
Chennai
9. Indian Maritime College, Chennai
10. Indus Seafarers Training Academy,
Chennai
11. International Maritime Academy,
Chennai
12. Maritime Foundation, Chennai
13. MASSA Maritime Academy, Chennai
14. Indian Maritime University (National
Maritime
Academy), Chennai
15. S.B.Vignesh Marine Training Centre, Chenn
ai
16. Southern Academy of Maritime Studies,
Chennai
17. Vel’s Academy of Maritime Studies
(Nautical
Science), Pallavaram, Chennai
18. Vel’s Academy of Maritime Studies (Marine
Engineering), Thalambur, Chennai
19. Coimbatore Marine College, Coimbatore
20. Park Maritime Academy, Coimbatore
21. SeaSkills Maritime Academy, Coimbatore
22. Noorul Islam College of Engineering, Kany
akumari
23. R.L Institute of Nautical Science
24. Mohammed Sathak Engineering College, Kil
akarai
25. Sri Chakra Maritime College, Puducherry
26. Marine Officers Training Academy, Pudu
cherry
27. Srivenkateshwara College of Engineering,
Sriperumbudur
28. Tamilnadu Maritime Academy, Thoothukudi
29. PSN College of Engineering & Technology,
Tirunelveli
30. Sri Nandhanam College of Engineering &
Te
chnology, Vellore