Monday, April 28, 2014

டாடி மம்மி

விருந்தாளிகளை
அப்பா அம்மா
என்று அழைக்கச்
சொல்கிறார்கள்...
கலாச்சார சீரழிவு ...
-டாடி மம்மி

Sunday, April 27, 2014

முதிர்கன்னியும் கண்ணீரும்

விடியாத இரவு 
வடியாத வெள்ளம்
-முதிர்கன்னியும்
கண்ணீரும்
Photo: விடியாத இரவு 
வடியாத வெள்ளம்
-முதிர்கன்னியும்
கண்ணீரும்

தொண்டைமான் - கடைசி தமிழ் மன்னன்

தொண்டைமான் - கடைசி தமிழ் மன்னன்


கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்

பல்லவர்

இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.

[தொகு]சோழர் ஆட்சியில் தொண்டைமான்


பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாலியும் புத்திசாலியும் கூட. ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள். கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மணம் முடித்து வைக்கிறார்.

[தொகு]அறந்தாங்கி தொண்டைமான்


அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். .[1]]]

[தொகு]புதுக்கோட்டை தொண்டைமான்

தோட்டி முதல் தொண்டைமான் வரையில் என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை. ‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன். என்பது விளக்கும்.

ஆவடை ரகுநாத தொண்டைமான்

ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்

இரகுநாத தொண்டைமான் - 1686 - 1730

புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இவரது தங்கை காதலி நாச்சியார், மாவீரன் ரெகுநாத சேதுபதி காத்த தேவரின் மனைவி ஆவார்.கலசமங்கலம், திருமயம், பகுதிகளை சேதுபதி இவருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது

விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769

இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர்.

இராயரகுநாத தொண்டைமான்(1769 – 1789)

ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர்(1789 – 1807)

இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 6 (1807 – 1825)

ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் 7 (1825 – 1839)

இவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830-ல் ஆங்கில அரசாங்கத்தாரால் ‘ஹிஸ் எக்சலென்சி’ என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர். இவர் 1839 ஜுலை 13-ல் இம் மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர்.

ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 8 (1839 – 1886)

இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபல் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது. இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்

ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார். இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். 1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . இவர்1997இல் மறைந்தார். ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்

[]தொண்டைமான் கட்டிய கோவில்கள்


திருப்பதி

திருப்பதி, ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது திருமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருமலையில் விஷ்ணுவுக்காக அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இக் கோயிலே திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனலாம். ஏழுமலை என்று அழைக்கப்படும் இம் மலையில் அமைந்துள்ள இக் கோயில் தமிழ் தொண்டைமானால் கட்டப்பட்டது.

மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்

சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.


நன்றி விக்கிபீடியா

Friday, April 25, 2014

100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

இந்த தலைப்பை வைத்துக்கொண்டு தான் இன்னும் சில நாட்களுக்கு இந்த ஊடங்கள் Manushya Puthiran போன்ற நடுநிலைவாதிகள்(அது ஒரு காலம்) என்று சொல்லியும் ஒரு நான்கு கட்சி பிரமுகர்களை வைத்துக்கொண்டும் மக்கள் மேல் குற்றம் சாட்டி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள்...

இந்த அரசியல் வாதிகளும் படித்தவர்களுக்கு நாட்டின் மேல் அக்கரை இல்லை சிலர் நடுநிலைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு தேர்தலை புறக்கணித்து ஜனநாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் பொருப்பில்லாதவர்கள் என்று இந்த ஜனநாயக பாதுகாவலர்களும் அப்பாவிகளை குறை சொல்லிவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் பேசிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்...

வெறும் தென் , மத்திய சென்னை, கன்னியாகுமரியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களை குறை கூறுவது முட்டாள் தனம்...

யாருக்கு பொருப்பில்லை வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து வரும் வாக்களார்களும் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்( பாருக் முகம்மது) என்பதற்கு உதாரணங்களும் இருக்கிறார்கள்..

யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது கூட தெரியாது ஆனாலும் நான் எனது ஜனநாயக கடமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று இந்த வெயிலிலும் வாயதான முதியவர்கள் பெரும்பான்மையானவர்கள் வந்து வாக்களித்தனர்..

நாமக்கே குழப்பம் வரலாம் யாரைக்கேட்டாலும் ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள் பிறகு எப்படி வாக்கு சதவீதம் குறைகிறது என்று...

இந்த குறைகளுக்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையத்திற்கென்று தனி அலுவலர்கள் இல்லாததும்.. மேலும் இன்னும் வாக்காளர்கள் சரிபார்த்தலில் குழறுபடிகள் இருப்பதுமே காரணம்
..
உதாரணமாக எங்கள் பகுதியில் 1405 வாக்காளர்கள்

இதில் சுமார் 15 சதவீதத்தினர் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள்
(குறிப்பு அவர்கள் வெளிநாட்டில் வசிக்க செல்லவில்லை)

இறந்தவர்கள் சுமார் 0.8 சதவீதம் ... வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் ஒரு 10 சதவீதம் பேர் இருக்கிறார்கள்...

எனக்கு தெரிந்து ஒரு 5 சதவீதம் பேர் வேண்டுமானல் எதற்கு ஓட்டெல்லாம் போட என்று மெத்தனமாக இருக்கலாம்...

எங்கள் பகுதியில் சுமார் 95 சதவீத வாக்குபதிவு என்றே நான் சொல்வேன் (கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா இருக்கும்)..

வாக்களிக்க தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்காதவர்களே அதிகம்...
பாரூக் முஹம்மது பாய் போல் அனைவருக்கும் வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது இயலாத காரியம்...

அதிலும் அவர்கள் ஒன்றும் வருடத்தில் 365 நாட்களுக்கு 180 நாட்களை வேலைநாட்களாக கொண்டும்... எலெக்சன் மற்றும் கணக்கெடுப்பு போன்ற நாட்டிற்கான வேலை வந்தவுடன் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு ஓடி ஒழிந்து கொள்ளும் ஆசிரியர் வேலை பார்க்கவில்லை...

ஒரு இந்தியனுக்கு தனக்கான வருமாத்திற்கான வழிவகையை செய்து கொடுக்க இந்த அரசுகளுக்கு வக்கில்லாததால் தான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் பிழைப்பிற்காக..

அவர்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உரிமையை நிலைநாட்ட ஆசையிருக்கத்தான் செய்யும் ...

அவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுக்காதது இந்த அரசுகளின் கையாளாகாத தனம் ...
அதைவிட்டு அவர்கள் உழைத்து கொண்டுவரும் வருமானத்தில் வரிஎன்று கொள்ளையடிப்பதை மட்டும் இந்த அரசு லாபகமாக செய்கிறது....

அடுத்து வெளிஊர்களில் வேலை செய்பவர்கள் அவர்களும் இந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போலதான் இந்த ஒரு நாள் விடுமுறையில் சென்னையில வேலை செய்யும் கன்னியாகுமரி வாக்காளர் எப்படி வாக்களிக்க முடியும்....
இதில் சிலர் வெளிமாநிலங்களிலும் வேலை செய்கிறார்கள்

அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பினை இந்த அரசாங்கமோ ஆணையமோ ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்கள் மேல் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்...

சும்மா டிவில பேசுறோம்னு எதையாவது பேசாதீங்கயா....

#வாக்களிக்க_வாய்ப்பு_கிடைக்காத_நண்பர்களுக்கு_சமர்ப்பணம்

---
#கபார்கான்_அறந்தாங்கியான்


Photo: 100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

இந்த தலைப்பை வைத்துக்கொண்டு தான் இன்னும் சில நாட்களுக்கு இந்த ஊடங்கள் Manushya Puthiran போன்ற நடுநிலைவாதிகள்(அது ஒரு காலம்) என்று சொல்லியும் ஒரு நான்கு கட்சி பிரமுகர்களை வைத்துக்கொண்டும் மக்கள் மேல் குற்றம் சாட்டி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள்...

இந்த அரசியல் வாதிகளும் படித்தவர்களுக்கு நாட்டின் மேல் அக்கரை இல்லை சிலர் நடுநிலைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு தேர்தலை புறக்கணித்து ஜனநாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் பொருப்பில்லாதவர்கள் என்று இந்த ஜனநாயக பாதுகாவலர்களும் அப்பாவிகளை குறை சொல்லிவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் பேசிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்...

வெறும் தென் , மத்திய சென்னை, கன்னியாகுமரியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களை குறை கூறுவது முட்டாள் தனம்...

யாருக்கு பொருப்பில்லை வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து வரும் வாக்களார்களும் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்( பாருக் முகம்மது) என்பதற்கு உதாரணங்களும் இருக்கிறார்கள்..

யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது கூட தெரியாது ஆனாலும் நான் எனது ஜனநாயக கடமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று இந்த வெயிலிலும் வாயதான முதியவர்கள்  பெரும்பான்மையானவர்கள் வந்து வாக்களித்தனர்.. 

நாமக்கே குழப்பம் வரலாம் யாரைக்கேட்டாலும் ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள் பிறகு எப்படி வாக்கு சதவீதம் குறைகிறது என்று...

இந்த குறைகளுக்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையத்திற்கென்று தனி அலுவலர்கள் இல்லாததும்.. மேலும் இன்னும் வாக்காளர்கள் சரிபார்த்தலில் குழறுபடிகள் இருப்பதுமே காரணம்
..
உதாரணமாக எங்கள் பகுதியில் 1405 வாக்காளர்கள்

இதில் சுமார் 15 சதவீதத்தினர் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள் 
(குறிப்பு அவர்கள் வெளிநாட்டில் வசிக்க செல்லவில்லை) 

இறந்தவர்கள் சுமார் 0.8 சதவீதம் ... வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் ஒரு 10 சதவீதம் பேர் இருக்கிறார்கள்...

எனக்கு தெரிந்து ஒரு 5 சதவீதம் பேர் வேண்டுமானல் எதற்கு ஓட்டெல்லாம் போட என்று மெத்தனமாக இருக்கலாம்...

எங்கள் பகுதியில் சுமார் 95 சதவீத வாக்குபதிவு என்றே நான் சொல்வேன் (கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா இருக்கும்)..

வாக்களிக்க தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்காதவர்களே அதிகம்... 
பாரூக் முஹம்மது பாய் போல் அனைவருக்கும் வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது இயலாத காரியம்...

அதிலும்  அவர்கள் ஒன்றும் வருடத்தில் 365 நாட்களுக்கு 180 நாட்களை வேலைநாட்களாக கொண்டும்... எலெக்சன் மற்றும் கணக்கெடுப்பு போன்ற நாட்டிற்கான வேலை வந்தவுடன் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு ஓடி ஒழிந்து கொள்ளும் ஆசிரியர் வேலை பார்க்கவில்லை...

ஒரு இந்தியனுக்கு தனக்கான வருமாத்திற்கான வழிவகையை செய்து கொடுக்க இந்த அரசுகளுக்கு வக்கில்லாததால் தான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் பிழைப்பிற்காக..

அவர்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உரிமையை நிலைநாட்ட ஆசையிருக்கத்தான் செய்யும் ... 

அவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுக்காதது இந்த அரசுகளின் கையாளாகாத தனம் ... 
அதைவிட்டு அவர்கள் உழைத்து கொண்டுவரும் வருமானத்தில் வரிஎன்று கொள்ளையடிப்பதை மட்டும் இந்த அரசு லாபகமாக செய்கிறது....

அடுத்து வெளிஊர்களில் வேலை செய்பவர்கள் அவர்களும் இந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போலதான் இந்த ஒரு நாள் விடுமுறையில் சென்னையில வேலை செய்யும் கன்னியாகுமரி வாக்காளர் எப்படி வாக்களிக்க முடியும்....
இதில் சிலர் வெளிமாநிலங்களிலும் வேலை செய்கிறார்கள் 

அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பினை இந்த அரசாங்கமோ ஆணையமோ ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்கள் மேல் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்... 

சும்மா டிவில பேசுறோம்னு எதையாவது பேசாதீங்கயா.... 

#வாக்களிக்க_வாய்ப்பு_கிடைக்காத_நண்பர்களுக்கு_சமர்ப்பணம்

---
#கபார்கான்_அறந்தாங்கியான்

Thursday, April 24, 2014

தலைமகன்

அம்மாக்களின்
சூப்பர் ஹீரோக்கள்
-தலைமகன்

Tuesday, April 22, 2014

பிரச்சார மேடை

புது தொழில்நுட்ப
புதுய பரிணாம
நாடக
மேடைகள்
#பிரச்சார மேடை
Photo: புது தொழில்நுட்ப 
புதுய பரிணாம 
நாடக
மேடைகள்
#பிரச்சார மேடை

Sunday, April 20, 2014

தெனாலிராமன்

தெனாலிராமன் 

நனது சொந்த காரணங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கு மிகவும் பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்....
இன்னும் வடிவேலுவை மக்கள் மறக்கவில்லை என்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டமே சான்று...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு ராஜா வேடத்திற்கான கம்பீரம் வடிவேலுவுக்குதான் மிகவும் பொருத்தமாக உள்ளது... ஒவ்வொரு காட்சியிலும் வடிவேலுவின் அனுபவம் தெரிகிறது .... 
குறிப்பாக டயலாக் டெலிவெரியில் மனிதர் பிண்ணுகிறார்....
நடிப்பில் புகுந்து விளையாடியுள்ளார்...

இரண்டு வேடங்களிலும் அசத்தலான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் வசப்படுத்துகிறார்....

இந்த திரைப்படத்தில் குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகளை பாராட்டியே ஆக வேண்டும் அழகாக செய்திருக்கிறார்கள் .... குறிப்பாக சீன தேசத்தை காண்பித்தவிதம் உண்மையில் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தில் சுட்டிருப்பார்களோ என்று தோணும் அளவிற்கு சிறப்பாக இருந்து ...

இசை எத்தனை பாடல்கள் என்ன பாடுகிறார்கள் (ஸ்ரேயா கோசலின் ஆணழகு பாடலைத் தவிர) என்று புரியாத அளவிற்கு பாடல்கள் உள்ளது. ஆனால் பிண்ணனி இசையை அசத்தலாக செய்திருக்கிறார்கள்... இமான்

ஹீரோயின் ... இந்த புள்ளைய ஏற்கனவே எந்த படத்திலயோ பார்த்த ஞாபகம்.. இந்த படத்தில் அழகாக இருக்கிறார்... ஆனால் தனக்கு எதற்காக. இந்த படத்தில் வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து நடித்துக்காட்டியிருக்கிறார்...

ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது குறிப்பாக லாங்சாட்ஸ் எல்லாம் அழகாக அமைத்திருக்கிறார்கள்...

அரண்மனை செட்டிங் பெரும்பாலான திரைப்படங்களில் நாம் பார்த்ததை போன்றே இருக்கிறது... கலை இயக்குனர் இந்த படத்திற்கு இது போதும்என்று நினைத்துவிட்டார் போலும்...

யுவராஜ் தயாளன் படத்தின் இயக்குநர் தெனாலிராமன் கதையுடன் நமது நாட்டின் தற்போதைய நிலையையும் இணைத்துக்கூற நினைத்திருக்கிறார்...

தெனாலிராமனின் கதைகளில் நாம் அனைவருக்கும் தெரிந்த கதைகளையே சொல்லியிருக்கிறார் ஆனாலும் அதை வடிவேலு தன் அசாத்திய நடிப்புத்திறமையால் அனைவரையும் விழுந்த விழுந்து சிரிக்க வைத்திருக்கிறார்...

குறிப்பாக இயக்குனரின் நம் தேசத்தின் நிலையை நாசுக்காக நருக்கென்று பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார குறிப்பாக ”சாகும் முன் உண்ணாவிரம்”...

தெனாலிராமனின் காமெடி கலக்கலுடன் சில நாட்டுநடப்புகளை இணைக்கும் பொழுது இயக்குனர் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.. இடைவேளைக்கு பிறகு படம் காமெடி டிராக்கிலிருந்து மாறுகிறது வாடிவேலுவின் காமெடியை ரசிக்க வந்த ரசிகர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது...

அந்த குறையை கதாபாத்திரங்கள் நிவர்த்தி செய்கிறார்கள்... படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நமக்கு வடிவேலுவைப்போல் ரசிகர்களுக்கு தெரிந்த முகம் அதுவே படத்தில் பெரிய பலம்...

ஒரு கட்டத்தில் படம் சலிப்பைத்தட்டி ரசிகர்கள் தூங்கும் நிலைக்கு தள்ளப்படும்பொழுது மன்சூர் அலிகானின் வரவு அனைவரையும் சரியான தேர்வு...

ரசிகர்கள் ஒரு பெரிய கிளைமாக்ஸை எதிர்பார்த்து காத்திருக்கையில் திடீரென்று படம் முடிந்த விடுகிறது... இதை எத்தனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை...

திரைக்கதையில் இயக்குநருக்கு தேர்ச்சி தேவை...

23ம் புலிகேசி போல் எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றமே...

ஆனாலும் வடிவேலு & கோவின் நடிப்பிற்காக பார்க்கலாம்...

தெனாலிராமன் ... சிங்கம் களம் இறங்கிருச்சு.....

3.2/5