July 21, 2014 at 10:03PM via Facebook
Monday, July 21, 2014
சதுரங்க வேட்டை - இதற்கு முன் எத்தனையோ சினிமாக்களில் நாம் திருட்டை பற்றிபார்த்திருப்போம் அவை பிட்பாக்கெட், பீரோபுல்லிங், கொலை கொள்ளை போன்ற அடிக்கடி கேள்விப்பட்ட விசயங்களையும் அல்லது நாம் சற்றும் எதிர்பார்க்காத நடந்திராக இன்டெலிஜென்ட் வகையென்று சொல்லப்படும் திருட்டுக்களையும் தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் இதுவரை யாரும் சொல்லத் துணியாத சொல்லாத திருட்டுவகைகளை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் இவை அன்றாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருட்டுகள்தான் சொல்லப்போனால் நம் நண்பரோ உறவினரோ இந்த திருட்டில் பாதிக்கப்பட்டிருப்பர். பலர் கௌரவத்தை காரணம் காட்டி இதை வெளியில் சொல்லாமலும் இருப்பர். மேலும் நமது மீடியாக்கள் இந்த வகையான திருட்டிற்கு வைத்திருக்கும் பெயர் மோசடி. கதைநாயகன் நட்ராஜ் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரக்டாின் தன்மை புாிந்து நடித்திருக்கிறார். மக்களை ஏமாற்ற அவர் செய்யும் ஒவ்வொரு மோசடி வேலைக்கும் நடிப்பில் ரசிகர்களிடம் சபாஷ் வாங்குகிறார். இளவரசு, பொன்வண்ணன், ஹீரோயின் உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் குறிப்பாக தூய தமிழ் பேசும் வில்லன் கவனிக்கசெய்கிறார். ஒளிபதிவு இசை என அனைத்தும் படத்திற்கு போதுமான அளவு செய்திருக்கிறார்கள். வைரமுத்துவின் வரிகள் அருமை "வெறித்தோடி போனது வாழ்க்கை” என்று ஒரு சிறு இடைவேளைக்கு பின் தத்துவ வாிகளை தந்திருக்கிறார்... திரைப்படத்தின் மெயின் ஹீரோ வசனம் ஒவ்வொரு வசனமும் தீப்பொறிதான்... மற்றும் நடைமுறை சமூகத்துடனும் ஒத்திருக்கிறது.. நெகடிவ்வான ஒரு கதைகளத்தை தேர்ந்தெடுத்து அதில் விரசமான பாடல்களோ சீன்களோ இல்லாமல் சொல்லப்போனால் ஹீரோ சண்டையேபோடாமல் ஹீரோயிசத்தையும் காட்டியிருக்கிறார். இயக்குனர். ஒவ்வொரு காட்சிகளிலும் இயக்குனரின் திறமையும் தெளிவும் தொிகிறது. முழுக்கமுழுக்க கதையின் மேல் நம்பிக்கை வைத்து ஜெயித்தும் இருக்கிறார்கள்.. இயக்குனருக்கு பாராட்டுகள்... குறையும் நிறையும்.. பிரபலமான ஹீரோ இல்லாததால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment