Thursday, October 23, 2014

எந்திரமயமான தீபாவளி கொண்டாட்டங்கள்...

முன்னெல்லாம தீபாவளினா ஒரு வாரமாவே ஒரு ஆவலோடு இருப்பாங்க அது மட்டும் இல்லாம தீபாவளி அன்றைக்கு அனைவரும் ஆனந்தமா கொண்டாடுவாங்க..
இப்பவும் எல்லாரும் ஹேப்பியாதான் இருக்காங்க ஆனா அதற்கான காத்திருப்பு கொண்டாட்டம் கொஞ்சம் குறைவாதான் இருக்கு...
காரணம் - முன்னெல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்குதான் எல்லாரும் டிரெஸ் எடுப்பாங்க அந்த டிரெஸ்ஸ போட்டுட்டு வெளிய வரும்போது ஒரு ஆனந்தம் அந்த சந்தோசமே தனி...
ஆனா இப்ப குறைந்தது ஒரு 6 மாதத்திற்கு ஒரு முறையாவது டிரெஸ் எடுத்திடுறோம்...
அது போல் பலகாரம்- கேஸ் அடுப்பு இல்லாம விறகு அடுப்பிலேயே பல வகையான பலகாரங்கள் செய்து பக்கத்து வீட்டில் நண்பர்களுக்கு கொடுக்கும் போது. நம்ம வீட்ல செய்தது எல்லாரும் நல்லா இருக்கனும்னு சொல்லனும்னு ஒரு ஆவலோட ஆனந்தத்தோட கொடுப்போம்... நண்பரும் அதை ஆவலுடன் வாங்க நம்ம வீட்டு பலகாரத்தில் என்னென் அயிட்டம் என்ன ஸ்பெசல்னு பார்ப்பார்...
இப்ப கேஸ் அடுப்பே இருந்தாலும் பலகாரம்கரது பேக்கரி அயிட்டம்தான் அது நல்லா இருக்குனு சொல்லனும்னு யாரும் விரும்பமாட்டோம் ஒரு சம்பிரதாயமா கொடுப்போம்...
நாம கொண்டுபோய் கொடுப்பவரும் ஒரு ஆவலோட வாங்கமாட்டார்....
அப்ப பொதிகை டிவி மட்டும்தான் அந்த புரோகிராம்ஸ அவ்வளவா விரும்பி பார்க்க மாட்டோம்...
இப்ப பேக்கரில வாங்கிட்டு வந்த பலகாரமா இருந்தாலும் பசங்களிடம் இதை கொண்டு போய் கொடுத்திட்டு வாங்கப்பானு சொன்னா...
அட இருமா தலைவர் பேசுரார் தலைவலி பேசுறார்னு போகமாட்ராங்க...
எங்க ஏரியாவில் தீபாவளி அன்றைக்க நடந்து போனா ரோடே தெரியாது பேப்பராதான் இருக்கும்...
இப்ப அப்படி யாரும் கொண்டாடுறதா தெரியல ...
இப்ப குழந்தைகளுக்கான விழாவாகவும் ஒரு சம்பிரதாய கொண்டாட்டமாகவுமே தீபாவளி கடந்து செல்கிறது...
இப்படி கொண்டாடுற தீபாவளியாவது மிச்சம் இருக்கட்டும்...
வரும் காலங்களில் ஆன்ராய்டு போன்ல பட்டாச விட்டுட்டு இன்பாக்ஸ்ல வந்து ஸ்வீட்ட போட்டுட்டு (போட்டாவா) போகம இருந்தா சரி

No comments:

Post a Comment