Saturday, January 17, 2015

”ஐ” எனது பார்வையில்


”ஐ” தமிழ் சினிமாவில் மிகுந்த பொருட்செலவில் பெரும் எதிர்பார்ப்பு என விக்ரமின் கடின உழைப்பு மற்றும் சங்கரின் பிரம்மாண்டத்துடன் வெளிவந்திருக்கும் திரைப்படம்

கதை- பல படங்களில் பார்த்த பழிவாங்கள் கதை …. டிரெய்லரை பார்த்தே பாதி கதையை யூகித்துவிடலாம். சங்கருக்கும் மணிரத்தனத்திற்கும் சுஜாதா போன பிறகு கதை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் என்பதை ஐ-யை வைத்து தீர்மானித்துக்கொள்ளலாம்.

இசை- அதான் ரகுமான் நான் பிசி பிசினு சொல்றாரே அப்பறம் ஏன் அவர டிஸ்ட்ரப் பண்றீங்க. இவ்வளோ பெரிய படத்திற்கு ஏனோ தானோவென்று இசையமைத்தது போல் உள்ளது…. ஏதோ ஒன்று இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து பழகிவிட்டதால் திரையில் புரிகிறது… பின்னணி இசையும் அவ்வளவாக மெனக்கெட்டதாக தெரியவில்லை

எமிஜாக்சன்- விளம்பர மாடல் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் நடிக்கவும் செய்திருக்கிறார். விட்டால் ஆடைகளே இல்லாமல் நடிப்பார் போலும் சில காட்சிகளில் ஆடை அணிந்திருக்கிறாரா என்பதே சந்தேகம் தான். அவர் வரும் பெரும்பாலன காட்சிகளில் ஆபாசம். இதுக்கு யு சர்டிபிகேட் வேறு வேண்டுமாம்.

சந்தானம்- எந்திரன்ல டம்மியா வச்சிருந்தார் சங்கர்… சரி இந்த படத்திலாவது பெரிதாக இவரை பயன்படுத்தியிருப்பார் என நினைத்தால் நம்மை மட்டுமல்ல சங்கர் சந்தானத்தையும் ஏமாற்றியிருக்கிறார். சந்தானம் சங்கரிடம் கேட்டிருப்பாப்ல போல ”என்ன சார் எனக்கு காமெடி சீக்வென்சே இல்லைனும்” சங்கர் சொல்லிப்பாபாப்ல போல ”கிளைமாக்ஸ்ல நீங்கதான் சந்தானம் பின்றீங்க” அவன் அவன் இருக்குற கடுப்புல சந்தானம் வேற கமெடி பண்றேனு கிளைமாக்ஸ்ல அடங்கப்பா வில்லன்களுக்கு இருக்கும் எரிச்சலை விட நமக்கு அதிகமாக வருது…. ஆனாலும் அந்த காமெடிக்கு பக்கத்தில் குழந்தைகளின் சிரிப்புச்சத்தமும் கேட்கிறது…

ஒளிப்பதிவு- ஸ்ரீராம் இவரை ஒளிப்பதிவில் அடித்துக்கொள்ள ஆள் இல்லை சங்கரின் பொருட்செலவான பிரமாண்டத்தை இவரின் கேமரா இன்னும் 100 மடங்கு அதிகப்படுத்திகாட்டுகிறது. சஸ்பென்ஸ் காட்சிகள் மற்றும் விக்ரம் அதுக்கும் மேல என்று சொல்லும் இடங்களில் ஒரு மாஸ் இல்லை…

இதர நடிகர்கள்- சிவாஜியின் மூத்த வாரிசு இதில் சும்மா தலைகாட்டாமல் முழு வில்லனாக நடித்திருக்கிறார். இவருடன் நான்கு வில்லன்கள் அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். அந்த திருநங்கை கேரக்டர் எதற்கு அதை ஒரு பெண்ணாகவே கற்பனை செய்திருக்கலாம். சங்கர் அந்த திருநங்கையை வைத்து காமெடி என நினைத்து எடுத்த காட்சிகள் ஒரு வித பரிதாபத்தையும் சங்கரின் மேல் கோபத்தையும் தான் ஏற்படுத்துகிறது. உங்க கற்பனை அவ்வளவு கேவலமாவா போச்சு…

சங்கர்- மீண்டும் சங்கர் தான் ஒரு பிரமாண்ட பட வியாபாரி என நிரூபித்து விட்டார். ஆனால் படைப்பாளி சங்கர் எங்க… லவ் சஸ்பென்ஸ் திரில்லர் படம்னு சொன்னீங்க லவ் ஒரு வித சளிப்புடன் இருந்தது ஓகே… சஸ்பென்ஸ் திரில்லர் எங்க… உங்களுக்கு யார் இந்த பிளாஸ்பேக் திரைக்கதை ஐடியாக கொடுத்தது. பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தையும் சளிப்பையும் ஏற்படுத்தும் ஒரு மொக்கை திரைக்கதை… பாடல்காட்சிகளுக்கு மட்டும் அதிக நேரம் சிரமம் எடுக்காம கதை திரைக்கதையிலும் கவனம் செலுத்துங்கள்… ஏதோ பல படங்கள் தங்களுடன் போட்டிக்கு வராததால் தப்பித்திருக்கிறீர்கள்..

மேக்கப்- படத்தின் அடுத்த ஹீரோ சொல்லப்போனால் படமே மேக்கப்தான்… சூப்பர்

விக்ரம்- என்னடா விக்ரம் பத்தி கடைசிலனு கேட்கலாம்…. மொத்த படமுமே விக்ரம் விக்ரம் விக்ரம் உழைப்பு உழைப்பு ….. மனிதர் நடிப்பில் தனது உழைப்பில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார். மெட்ராஸ் பாசை மட்டும் கொஞ்சம் முரண்படுது…. மற்றபடி ரசிகர்கள் முழுப்படத்தையும் பார்க்க உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் விக்ரம் என்ற நடிகருக்காக தான்… அவர் முகம் காட்டும் அத்தனை காட்சிகளிலும் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ். கண்டிப்பாக அனைவரும் பார்த்து பாரட்ட வேண்டும்.
சண்டைக்காட்சிகள் விசுவல் டிரீட். கேஎஸ் ரவிக்குமார் இனிமே ஸ்பைடர் மேன் பேட்மேன சப்போர்ட்டுக்கு கூப்பிட வேண்டாம். இனி ஐ விக்ரம் பண்ணும்போது நாங்க செய்யக்கூடாதானு சொல்லலாம்.

ஐ- எதிப்பார்த்ததை விட அதிகம் திறமைகாட்டி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் விக்ரம்… ஆனால் இயக்குனர் சங்கர் ஏமாற்றிவிட்டார்.

-சுமார்


பாசிட்டிவ்
நெகட்டிவ்
விக்ரம்
கதை
விக்ரம்
திரைக்கதை
விக்ரம்
இசை
ஒளிப்பதிவு
திரில்லர்




Wednesday, January 14, 2015

பொங்கல் ஸ்வீட் கடையின் பண்டிகைகால சிறப்பு டிஷ்ஷாக மாறிவிடும் போலும்

பொங்கல் கரும்பும் சர்க்கரைப்பொங்கலும் தான் கண்முன் தெரியும் பொங்கல் வரும் வாரத்தின் முதல் வாரமே பொங்கல் பண்டிகையின் எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். தினமும் வடமாட்டு திடலில் நடைபெறும் பணிகளை நண்பர்கள் குழுவாக சென்று பார்த்துவிட்டுவருவது...

பொங்கல் தினத்தன்று எங்கள் ஏரியா சாலை முழுவதும் கரும்பு தோகைகள் தான் இருக்கும் சாலையே தெரியாது. எந்த சாதி மதம் பாராத பண்டிகை ...

ஆனால் இன்று அதற்கான எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் வாழ்த்துகள் சொல்வதோடு சரி...

கரும்பும் எந்த வீட்டையும் நிறைத்ததாக தெரியவில்லை...

எந்த குழந்தைகள் முகத்தி்லும் பொங்கல் என்ற எதிர்பார்ப்போ அதற்கான சந்தோஷ கலையோ இல்லை...

பெரும்பாலும் வெறும் திரைப்படத்தை மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம்...

எந்திர வாழ்க்கையுடன் கொண்டாட்டங்களையும் இழந்துகொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்...


பொங்கல் ஸ்வீட் கடையின் பண்டிகைகால சிறப்பு டிஷ்ஷாக மாறிவிடும் போலும்

Friday, January 9, 2015

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி 09.11.2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி

சினிமா கலைஞர்களின் கற்பனைச் சுதந்திரம் மற்றும் அந்த கருத்து சுதந்திரத்தை பறிக்கும் போராட்டகாரர்கள்

எல்லாரும் அவங்க அவங்க சார்பா நல்லா பேசுனாங்க…

டைரக்டர் கமலக்கண்ணன் இது எங்கள் கருத்து சுத்திரத்தை கற்பனை சுதந்திரம்  நாங்களா உங்கள பாருங்கனு கூப்பிட்டோம்னு சொன்னார்… நீங்க ஏன் போராடுகறீங்க இது மாதிரி உட்கார்ந்து பேச வேண்டியது தானே அப்படினும் சொன்னார்…

ஒரு ஓவியர் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் அப்ப நாங்க அதை பார்த்துக்கொண்டு அவரோட கற்பனைச்சுதந்திரம்னு உட்கார்ந்திருக்கனுமா… ஒரு நிறுவனம் கடவுள்களின் படங்களை ஜட்டியில் பிரிண்ட் செய்து வெளியிட்டார்கள் அதை டிசைன் சுதந்திரம்னு சும்மா இருக்கனுமா…

சரி அது உங்க கற்பனைச் சுதந்திரம்னு சொல்றீங்க …
படம் ஆரம்பிக்கும் போது இதில் வரும் கதையும் கருத்துக்களும் கற்பனைனு போடுறீங்க… முடிவில் விவசாயிகளுக்கு சமர்பணம்னும் முடிக்கிறீங்க…

அப்பறம் அந்த கதை திருட்டு கதைனு சிலர் சொல்ல ஆரம்பிச்சதும் இது ஒரு ஊரோட கதை நான் அவங்க படும் கஷ்டத்தை பார்த்து எடுத்த படம்னு சொல்றீங்க…

7 ஆம் அறிவுனு ஒரு படம்
நடிகர் சூர்யா அந்த பட வெளியீட்டு விழாவில் “ஒரு தமிழரின் புகழ் தமிழர்களுக்கே தெரியாமல் இருப்பதை கண்டு எனக்கு கோபம் இதை கேட்டதும் தமிழுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் எல்லாருக்கும் தமிழனின் பெருமையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று இதில் நடித்தேன்” அப்படினு சொன்னார் இவர் பேசியது சினமால இல்ல ஒரு பொது மேடையில்….

இதையே டைரக்டர் முருகதாசும் பேசினார்…
ஆனா அதோட வேற்று மொழி பதிப்புகளில் அந்தந்த மாநிலத்தில் இருந்து வருவது போதும் இருக்கும்…
விஸ்வரூபம் கமல் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய படம் அதில் கோவை பற்றி ஒரு வசனம் வந்திருக்கும்… நீங்கள் சொல்வதுபோல் கற்பனை என்றால் அவர் கற்பனை என்ற சொல்ல வேண்டியது தானே ஏன் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்…

அப்படி ஆதாரம் இருந்தால் அதை காட்ட வேண்டாம் ஏன் வேற்று மொழி பதிப்புகளில் வேறு வேறு ஊர்களின் பெயர்களை பயன்படுத்தினார்
இப்படி கற்பனைனு சொல்லிட்டு காசுக்காக எதை எதையாவது கற்பனை பண்ணுவீங்க வேறா யாரும் எதுவும் கேட்கக்கூடாது…
படத்தை ரிலீஸ் பண்ணிட்டு விவாதம் பண்ணலாம்னு நீங்க கூப்பிடுறதே அந்த படத்தை புரோமோட் செய்யதான்… படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னால் நீங்கள் நான் இப்படி படம் எடுத்திருக்கேன் அப்படினு சொல்லி விவாதித்துவிட்டு  ரிலீஸ் செய்லாமே…

அப்பறம் எதுக்கு சென்சார் போர்டு இருக்கு நீங்க அங்கதான் கேக்கனும் என்று சொல்பவர்கள்…
சென்சார் போர்டு எப்படினு உங்களுக்கே தெரியும் அந்த சென்சார் போர்டு ரஜினி, சங்கர் … படங்களையும் சாதாரண டைரக்டர் புது ஹீரோ புது தயாரிப்பாளர் படங்களையும் ஒரே மாதிரி தான் பார்ப்பார்களா…

சந்திரமுகி படதில் வரும் அத்தனை காமெடிகளும் இரட்டை அர்த்த வசனங்களுடனே வரும் … கற்பனை வாதி வேண்டுமானால் “நீங்கள் ஏன் தவறான பார்வையில் பார்க்கிறீர்கள”; என்று கேட்கலாம்…
அப்போ நீங்க ரெட்டை அர்த்தத்தில் அதை எழுதவில்லை என்றால்;… அந்த வசனத்துடன் வடிவேலுவையும் வேலைக்காரியையும் ஒப்பிட்டுக்காட்டியதும் உங்கள் அந்த கற்பனை கருமம் தானே....

இதில் வரும் தடித்த வார்த்தைகளுக்கு ஒரு மியூட் கூட செய்திருக்கமாட்டார்கள்…

ஒரு அரசாங்கந்தை மாற்றவே 5 வருடம் கழித்துதான் முடியும் என்கிறபோது நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிட்டு நாங்க சென்சார் போடுட்ட கேட்கறதுக்குள்ள என்னென்ன நடக்கும்னு உங்களுடைய அந்த கற்பனை படங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது…

நல்லபடங்கள் நல்லகற்பனையாளர்கள் பலர் இருக்கிறார்கள் உண்மைதான் ஆனால் நாங்கள் திரைத்துறை என்று கூறி அனைவருக்கும் வக்கலத்து வாங்குறீங்க…

போராடுவது தப்புனா இதே திரைத்துறை உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டமும் ஒரு காலத்தில் ஒன்றாக திரண்டு நெய்வேலிக்கெல்லாம் போனீங்களே எதுக்க…

#உங்களுக்கு_வந்தா_இரத்தம்_மற்றவங்களுக்கு_தக்காளிச்சட்னியா….

”நிதி அயோக்”

திட்டகமிசன் சரியா செயல்படவில்லைனு பொருளாதார மேதைகள் அதோட பெயரை ”நிதி அயோக்” என்று மாற்றிவிட்டார்களாம்...
பெயரை மாற்றுவதற்கு ஒரு நியுமராலஜிஸ்ட் போதுமையா... எதுக்குயா எகனாமிக்ஸ்ட்

Thursday, January 8, 2015

கேள்வி2

கேள்வி2ஆளும்கட்சி

சிலமாதங்களுக்கு முன் நீங்க தானே ஆதார் அட்டை நேரடி மானியம்மெல்லாம் கூடாதுனு சொன்னீங்க.. இப்ப நீங்களே வேணும்னு சொல்றீங்க.

”அப்ப நாங்க எதிர்கட்சி”

கேள்வி2எக்ஸ்.ஆளும்கட்சி

சார் நீங்க இப்ப பெட்ரோல் டீசல் விலையெல்லாம் குறைக்னும்னு சொல்றீங்க உங்க ஆட்சிலயும் கச்சா எண்ணை விலை குறைந்தது அப்ப நீங்க குறைக்கலையே
”இப்ப நாங்க எதிர்கட்சி”
ஆளாளுக்கு ஒரு கட்சி அப்பப்ப ஒரு பேச்சி

நல்ல்ல்ல....ஆட்சி