PCR Act
இது நிறைபேருக்கு பயத்தை ஏற்படுத்தும் சட்டம்... உயர்மட்டத்தினர் என்று கூறிக்கொண்டு ஏளனமாக கேலியாக நினைத்து தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி அவர்கள் மேல் ஆதிக்க வர்க்கத்தினர் செய்த கொடுமைகளிலிருந்து காக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது... இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டதிலிருந்து கீழ்மட்டம் என்று கூறப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட சொல்லப்போனால் ஒரு விடுதலை கிடைத்ததென்று கூட சொல்லலாம்...
இந்த சட்டம்...
தாழ்த்தப்பட்டவர் என்று ஏளனமாக ஒரு பார்வை பார்த்தால் கூட குற்றம் என சொல்கிறது...
தாழ்த்தப்பட்டவர் என்று ஏளனமாக ஒரு பார்வை பார்த்தால் கூட குற்றம் என சொல்கிறது...
ஜனநாயகம் இது அவர்களுக்கு கொடுத்த ஒரு விடுதலை என்றும் சொல்லாம்...
ஆனால் இன்று அந்த சட்டம் பல வழிகளில் தவறாக பயன்படுத்தப்படுகிறது..
சொந்த காரணங்களுக்கும் தவறை மறைக்கவும் கூட இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது..
ஒருவரை ஏளனமாக பார்த்தால் கூட குற்றம் என அவருக்கு எப்படி தனிமனித உரிமை இருக்கிறதோ...கொடுக்கப்பட்டிருக்கிறதோ...
அதேபோல் நீ எனக்கு அடிபணியவில்லையென்றால் உன்மேல் PCR கேஸ் கொடுத்துவிடுவேன் என மிரட்டுவதும் அதே குற்றத்திற்கு சமம்... சொல்ப்போனால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் கூட...
No comments:
Post a Comment