Showing posts with label puthiya thamlaimurai. Show all posts
Showing posts with label puthiya thamlaimurai. Show all posts

Sunday, November 9, 2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி 09.11.2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி

சினிமா கலைஞர்களின் கற்பனைச் சுதந்திரம் மற்றும் அந்த கருத்து சுதந்திரத்தை பறிக்கும் போராட்டகாரர்கள்

எல்லாரும் அவங்க அவங்க சார்பா நல்லா பேசுனாங்க…

டைரக்டர் கமலக்கண்ணன் இது எங்கள் கருத்து சுத்திரத்தை கற்பனை சுதந்திரம்  நாங்களா உங்கள பாருங்கனு கூப்பிட்டோம்னு சொன்னார்… நீங்க ஏன் போராடுகறீங்க இது மாதிரி உட்கார்ந்து பேச வேண்டியது தானே அப்படினும் சொன்னார்…

ஒரு ஓவியர் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் அப்ப நாங்க அதை பார்த்துக்கொண்டு அவரோட கற்பனைச்சுதந்திரம்னு உட்கார்ந்திருக்கனுமா… ஒரு நிறுவனம் கடவுள்களின் படங்களை ஜட்டியில் பிரிண்ட் செய்து வெளியிட்டார்கள் அதை டிசைன் சுதந்திரம்னு சும்மா இருக்கனுமா…

சரி அது உங்க கற்பனைச் சுதந்திரம்னு சொல்றீங்க …
படம் ஆரம்பிக்கும் போது இதில் வரும் கதையும் கருத்துக்களும் கற்பனைனு போடுறீங்க… முடிவில் விவசாயிகளுக்கு சமர்பணம்னும் முடிக்கிறீங்க…

அப்பறம் அந்த கதை திருட்டு கதைனு சிலர் சொல்ல ஆரம்பிச்சதும் இது ஒரு ஊரோட கதை நான் அவங்க படும் கஷ்டத்தை பார்த்து எடுத்த படம்னு சொல்றீங்க…

7 ஆம் அறிவுனு ஒரு படம்
நடிகர் சூர்யா அந்த பட வெளியீட்டு விழாவில் “ஒரு தமிழரின் புகழ் தமிழர்களுக்கே தெரியாமல் இருப்பதை கண்டு எனக்கு கோபம் இதை கேட்டதும் தமிழுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் எல்லாருக்கும் தமிழனின் பெருமையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று இதில் நடித்தேன்” அப்படினு சொன்னார் இவர் பேசியது சினமால இல்ல ஒரு பொது மேடையில்….

இதையே டைரக்டர் முருகதாசும் பேசினார்…
ஆனா அதோட வேற்று மொழி பதிப்புகளில் அந்தந்த மாநிலத்தில் இருந்து வருவது போதும் இருக்கும்…
விஸ்வரூபம் கமல் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய படம் அதில் கோவை பற்றி ஒரு வசனம் வந்திருக்கும்… நீங்கள் சொல்வதுபோல் கற்பனை என்றால் அவர் கற்பனை என்ற சொல்ல வேண்டியது தானே ஏன் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்…

அப்படி ஆதாரம் இருந்தால் அதை காட்ட வேண்டாம் ஏன் வேற்று மொழி பதிப்புகளில் வேறு வேறு ஊர்களின் பெயர்களை பயன்படுத்தினார்
இப்படி கற்பனைனு சொல்லிட்டு காசுக்காக எதை எதையாவது கற்பனை பண்ணுவீங்க வேறா யாரும் எதுவும் கேட்கக்கூடாது…
படத்தை ரிலீஸ் பண்ணிட்டு விவாதம் பண்ணலாம்னு நீங்க கூப்பிடுறதே அந்த படத்தை புரோமோட் செய்யதான்… படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னால் நீங்கள் நான் இப்படி படம் எடுத்திருக்கேன் அப்படினு சொல்லி விவாதித்துவிட்டு  ரிலீஸ் செய்லாமே…

அப்பறம் எதுக்கு சென்சார் போர்டு இருக்கு நீங்க அங்கதான் கேக்கனும் என்று சொல்பவர்கள்…
சென்சார் போர்டு எப்படினு உங்களுக்கே தெரியும் அந்த சென்சார் போர்டு ரஜினி, சங்கர் … படங்களையும் சாதாரண டைரக்டர் புது ஹீரோ புது தயாரிப்பாளர் படங்களையும் ஒரே மாதிரி தான் பார்ப்பார்களா…

சந்திரமுகி படதில் வரும் அத்தனை காமெடிகளும் இரட்டை அர்த்த வசனங்களுடனே வரும் … கற்பனை வாதி வேண்டுமானால் “நீங்கள் ஏன் தவறான பார்வையில் பார்க்கிறீர்கள”; என்று கேட்கலாம்…
அப்போ நீங்க ரெட்டை அர்த்தத்தில் அதை எழுதவில்லை என்றால்;… அந்த வசனத்துடன் வடிவேலுவையும் வேலைக்காரியையும் ஒப்பிட்டுக்காட்டியதும் உங்கள் அந்த கற்பனை கருமம் தானே....

இதில் வரும் தடித்த வார்த்தைகளுக்கு ஒரு மியூட் கூட செய்திருக்கமாட்டார்கள்…

ஒரு அரசாங்கந்தை மாற்றவே 5 வருடம் கழித்துதான் முடியும் என்கிறபோது நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிட்டு நாங்க சென்சார் போடுட்ட கேட்கறதுக்குள்ள என்னென்ன நடக்கும்னு உங்களுடைய அந்த கற்பனை படங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது…

நல்லபடங்கள் நல்லகற்பனையாளர்கள் பலர் இருக்கிறார்கள் உண்மைதான் ஆனால் நாங்கள் திரைத்துறை என்று கூறி அனைவருக்கும் வக்கலத்து வாங்குறீங்க…

போராடுவது தப்புனா இதே திரைத்துறை உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டமும் ஒரு காலத்தில் ஒன்றாக திரண்டு நெய்வேலிக்கெல்லாம் போனீங்களே எதுக்க…

#உங்களுக்கு_வந்தா_இரத்தம்_மற்றவங்களுக்கு_தக்காளிச்சட்னியா….