Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, June 2, 2015

மாறிய மாரி

மும்மாரி
வந்து
முப்போகம்
தந்தாய்
முப்பருவம்
முறைமாறி
பொழிந்து
பொய்த்ததேனோ

Monday, May 18, 2015

உயரே பறந்த தேசியகொடி

ஊழல் அமைச்சர் 
கைபட்டு
தலைகுனிந்து நின்று...
மாணவர்களின் 
தேசியகீத காற்றில்
உயரே பறந்த
தேசியகொடி

Sunday, May 17, 2015

எஸ்டேட்

காட்டை குடித்த
காபி எஸ்டேட்
நாட்டை குடித்த
ரியல் எஸ்டேட்

Monday, April 28, 2014

டாடி மம்மி

விருந்தாளிகளை
அப்பா அம்மா
என்று அழைக்கச்
சொல்கிறார்கள்...
கலாச்சார சீரழிவு ...
-டாடி மம்மி