Friday, January 9, 2015

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி 09.11.2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி

சினிமா கலைஞர்களின் கற்பனைச் சுதந்திரம் மற்றும் அந்த கருத்து சுதந்திரத்தை பறிக்கும் போராட்டகாரர்கள்

எல்லாரும் அவங்க அவங்க சார்பா நல்லா பேசுனாங்க…

டைரக்டர் கமலக்கண்ணன் இது எங்கள் கருத்து சுத்திரத்தை கற்பனை சுதந்திரம்  நாங்களா உங்கள பாருங்கனு கூப்பிட்டோம்னு சொன்னார்… நீங்க ஏன் போராடுகறீங்க இது மாதிரி உட்கார்ந்து பேச வேண்டியது தானே அப்படினும் சொன்னார்…

ஒரு ஓவியர் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் அப்ப நாங்க அதை பார்த்துக்கொண்டு அவரோட கற்பனைச்சுதந்திரம்னு உட்கார்ந்திருக்கனுமா… ஒரு நிறுவனம் கடவுள்களின் படங்களை ஜட்டியில் பிரிண்ட் செய்து வெளியிட்டார்கள் அதை டிசைன் சுதந்திரம்னு சும்மா இருக்கனுமா…

சரி அது உங்க கற்பனைச் சுதந்திரம்னு சொல்றீங்க …
படம் ஆரம்பிக்கும் போது இதில் வரும் கதையும் கருத்துக்களும் கற்பனைனு போடுறீங்க… முடிவில் விவசாயிகளுக்கு சமர்பணம்னும் முடிக்கிறீங்க…

அப்பறம் அந்த கதை திருட்டு கதைனு சிலர் சொல்ல ஆரம்பிச்சதும் இது ஒரு ஊரோட கதை நான் அவங்க படும் கஷ்டத்தை பார்த்து எடுத்த படம்னு சொல்றீங்க…

7 ஆம் அறிவுனு ஒரு படம்
நடிகர் சூர்யா அந்த பட வெளியீட்டு விழாவில் “ஒரு தமிழரின் புகழ் தமிழர்களுக்கே தெரியாமல் இருப்பதை கண்டு எனக்கு கோபம் இதை கேட்டதும் தமிழுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் எல்லாருக்கும் தமிழனின் பெருமையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று இதில் நடித்தேன்” அப்படினு சொன்னார் இவர் பேசியது சினமால இல்ல ஒரு பொது மேடையில்….

இதையே டைரக்டர் முருகதாசும் பேசினார்…
ஆனா அதோட வேற்று மொழி பதிப்புகளில் அந்தந்த மாநிலத்தில் இருந்து வருவது போதும் இருக்கும்…
விஸ்வரூபம் கமல் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய படம் அதில் கோவை பற்றி ஒரு வசனம் வந்திருக்கும்… நீங்கள் சொல்வதுபோல் கற்பனை என்றால் அவர் கற்பனை என்ற சொல்ல வேண்டியது தானே ஏன் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்…

அப்படி ஆதாரம் இருந்தால் அதை காட்ட வேண்டாம் ஏன் வேற்று மொழி பதிப்புகளில் வேறு வேறு ஊர்களின் பெயர்களை பயன்படுத்தினார்
இப்படி கற்பனைனு சொல்லிட்டு காசுக்காக எதை எதையாவது கற்பனை பண்ணுவீங்க வேறா யாரும் எதுவும் கேட்கக்கூடாது…
படத்தை ரிலீஸ் பண்ணிட்டு விவாதம் பண்ணலாம்னு நீங்க கூப்பிடுறதே அந்த படத்தை புரோமோட் செய்யதான்… படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னால் நீங்கள் நான் இப்படி படம் எடுத்திருக்கேன் அப்படினு சொல்லி விவாதித்துவிட்டு  ரிலீஸ் செய்லாமே…

அப்பறம் எதுக்கு சென்சார் போர்டு இருக்கு நீங்க அங்கதான் கேக்கனும் என்று சொல்பவர்கள்…
சென்சார் போர்டு எப்படினு உங்களுக்கே தெரியும் அந்த சென்சார் போர்டு ரஜினி, சங்கர் … படங்களையும் சாதாரண டைரக்டர் புது ஹீரோ புது தயாரிப்பாளர் படங்களையும் ஒரே மாதிரி தான் பார்ப்பார்களா…

சந்திரமுகி படதில் வரும் அத்தனை காமெடிகளும் இரட்டை அர்த்த வசனங்களுடனே வரும் … கற்பனை வாதி வேண்டுமானால் “நீங்கள் ஏன் தவறான பார்வையில் பார்க்கிறீர்கள”; என்று கேட்கலாம்…
அப்போ நீங்க ரெட்டை அர்த்தத்தில் அதை எழுதவில்லை என்றால்;… அந்த வசனத்துடன் வடிவேலுவையும் வேலைக்காரியையும் ஒப்பிட்டுக்காட்டியதும் உங்கள் அந்த கற்பனை கருமம் தானே....

இதில் வரும் தடித்த வார்த்தைகளுக்கு ஒரு மியூட் கூட செய்திருக்கமாட்டார்கள்…

ஒரு அரசாங்கந்தை மாற்றவே 5 வருடம் கழித்துதான் முடியும் என்கிறபோது நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிட்டு நாங்க சென்சார் போடுட்ட கேட்கறதுக்குள்ள என்னென்ன நடக்கும்னு உங்களுடைய அந்த கற்பனை படங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது…

நல்லபடங்கள் நல்லகற்பனையாளர்கள் பலர் இருக்கிறார்கள் உண்மைதான் ஆனால் நாங்கள் திரைத்துறை என்று கூறி அனைவருக்கும் வக்கலத்து வாங்குறீங்க…

போராடுவது தப்புனா இதே திரைத்துறை உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டமும் ஒரு காலத்தில் ஒன்றாக திரண்டு நெய்வேலிக்கெல்லாம் போனீங்களே எதுக்க…

#உங்களுக்கு_வந்தா_இரத்தம்_மற்றவங்களுக்கு_தக்காளிச்சட்னியா….

”நிதி அயோக்”

திட்டகமிசன் சரியா செயல்படவில்லைனு பொருளாதார மேதைகள் அதோட பெயரை ”நிதி அயோக்” என்று மாற்றிவிட்டார்களாம்...
பெயரை மாற்றுவதற்கு ஒரு நியுமராலஜிஸ்ட் போதுமையா... எதுக்குயா எகனாமிக்ஸ்ட்

Thursday, January 8, 2015

கேள்வி2

கேள்வி2ஆளும்கட்சி

சிலமாதங்களுக்கு முன் நீங்க தானே ஆதார் அட்டை நேரடி மானியம்மெல்லாம் கூடாதுனு சொன்னீங்க.. இப்ப நீங்களே வேணும்னு சொல்றீங்க.

”அப்ப நாங்க எதிர்கட்சி”

கேள்வி2எக்ஸ்.ஆளும்கட்சி

சார் நீங்க இப்ப பெட்ரோல் டீசல் விலையெல்லாம் குறைக்னும்னு சொல்றீங்க உங்க ஆட்சிலயும் கச்சா எண்ணை விலை குறைந்தது அப்ப நீங்க குறைக்கலையே
”இப்ப நாங்க எதிர்கட்சி”
ஆளாளுக்கு ஒரு கட்சி அப்பப்ப ஒரு பேச்சி

நல்ல்ல்ல....ஆட்சி

Monday, December 1, 2014

தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம்


தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம் பற்றி நிறைய விழப்புணர்வு விளம்பரங்களை தற்போது அரசு அதிகப்படுத்தியிருப்பது ஆரோக்யமான ஒன்றாக இருந்தாலும். தற்போதைய அரசு தூய்மை இந்தியா போன்ற பிரச்சாரங்களை முன்னிறுத்தி விடுகிறார்களே தவிர அதன் செயல் திட்டங்கள் என்ன என்பது பற்றி சரியாக விவரிப்பதில்லை. அதேபோல் பெரும்பாலும் அவசரகதியில் அனைத்தையும் செயல்படுத்துவதாக உள்ளது.
சாலையை சுத்தம் செய்வது என்பதை விட சாலைகளில் குப்பைகளை போடுவதை தவிர்ப்பதே சிறந்தது. அப்படியென்றால் குப்பைகளை எங்குபோடுவது அதற்கான வசதிகள் இருக்கிறதா?. ஒருவர் குப்பையை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என குப்பைத்தொட்டியை தேடினால் குப்பைத்தொட்டிகள் பெயரளவில் அதுவும் வெகு தூரங்களில் தான் வைக்கப்பட்டுள்ளது ஒருவர் தன் கையில் இருக்கும் குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என நினைக்க வைக்கவே பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டியுள்ள நிலையில் அவரை குப்பைதொட்டி தேடி வெகு தூரம் செல்வதென்பது வாய்பில்லாத ஒன்று. குறைந்தது 100 அடிக்கு ஒரு குப்பைத்தொட்டி என நகர்புரங்களில் நிறுவுவது இந்த திட்டம் வெற்றியடைய 100 சதவீதம் உதவியாக இருக்கும். பிரபலங்களை தெரு கூட்டுவதுபோல் நடிக்க கூப்பிட்டு பயன்படுத்தாமல். பிரபலங்கள் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு நகரங்களாக குப்பைத்தொட்டிகளை ஸ்பான்சர் செய்யலாம்.
பிறகு திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது பற்றிய விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்படுகிறது. ஒருவர் சிறுநீர் கழிப்பதை கைத்தட்டி அவர் சிறுநீர் கழிக்காமல் தடுப்பது போல் அந்த விளம்பரம் இருக்கிறது. சரி நகர்புறங்களில் இருக்கும் ஒருவர் சிறுநீர் கழிக்கவேண்டுமால் எங்கு சென்று கழிக்க முடியும். உதாரணமாக நமது அறந்தை நகரத்தை எடுத்துக்கொண்டால் ஒருவர் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமானால் எங்கு செல்வார். அதற்கான வசதியை அரசு செய்து கொடுத்திருக்கிறதா. இங்கு இருக்கும் தொழில் நிறுவன கட்டிடங்கள் அனைத்திலும் கழிவறை வசதி உள்ளதா.??? தொழில்நிறுவன கட்டிடங்கள் அனைத்திலும் கழிவறை கட்டாயமாக்கப்பட்டு அதை தரைத்தளத்தில் அனைவரும் பயன்படுத்தும் படி வைக்கவேண்டும். அதை தூய்மைபடுத்தும் பணியை அரசு ஏற்றுக்கொண்டால் பெயரளவிற்கு பொதுக்கழிவறை அமைக்க தேவையில்லை...

Thursday, November 27, 2014

அன்எம்ளாய்டட் யங்ஸ்டர்ஸ் (Unemployed Youngsters)

அரசு வேலை மட்டும் தான் எம்ப்லாய்மெண்ட் அரசு பணியில் இல்லாதவர்கள் அன்எம்ளாய்டட் ??? இது சில அரசு வேலையில் உள்ளவர்கள் மற்றும் சில பொதுமக்களின் டயலாக். அப்போ மற்ற தொழில்கள் வேலைகள் எல்லாம் வைலையில்லையா?? உங்கள் அன்றாட தேவைகளை நீங்கள் சொல்லும் எந்த எம்ளாய்மெண்டில் (அரசு) பூர்த்தி செய்து கொள்கிறீர்கள். நீங்கள் சம்பளம் வாங்குவது அரசு வேலையாக இருக்கலாம் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது யார்???
அரசு வேலை மட்டும்தான் வேலை என்ற மனபோக்கை மக்கள் மனதிலும் உண்டாக காரணம் பெரும்பாலன அரசு ஊழியர்களின் ஆடம்பர வாழ்வும் எந்த பிரச்சனைகளும் அவர்களுக்கு இல்லை என்பதும் தான்.
இப்படியாக எல்லோரிடமும் இந்த மனப்போக்கு இருந்தால் அது சமுதாய ஆரோக்கியத்திற்கு முரணானது.
இத்தனை அரசு ஊழியர்களில் மக்கள் மனதில் நிற்பவர்கள் எத்தனை பேர்.
உங்கள் ஊழியர் சங்க கூட்டங்களில் எத்தனை முறை நாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். நம் வேலையை விரைந்து முடிக்க என்னென்ன நடவடிக்கைகள் செய்ய வேண்டும். என்று தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். லஞ்சம் வாங்கினார் என்று எத்தனைபேரை உங்கள் சங்கங்களை விட்டு நீக்கியிருக்கிறீர்கள்.
ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்று பிடிபட்டால் அவரை விடுவிக்க எவ்வளவு பிரசர் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்பீர்கள். அதற்கும் உங்கள் சங்கங்களிலே லஞ்சம் வாங்குவீர்கள்.
சரியாக தன் கடமையை செய்பவர் ஒரு அரசு அலுவலகத்தில் இருந்தால் அவருக்கு அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் எத்தனை பட்டப்பெயர். மேலும் அவர் வேலையை கெடுக்க எத்தனை இடஞ்சல்கள் கொடுப்பீர்கள்.
தனியார் நிறுவனத்தில் மெசின் போல் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர். அரசு வேலை கிடைத்ததும் நேர்மாறாக மாறிவிடுவதையும் நாம் உணர்ந்திருப்போம்.
என்னடா டைட்டில விட்டுமேட்டர் வேற மாதிரி போகுதே அப்படினு யோசிக்கலாம்.
அரசு வேலையில் இல்லாதவர்களை அப்படி நினைக்க வைக்க காரணம் தனியார் கம்பெனியில் வேலை சரியாக செய்யவில்லை என்றால் உடனடியாக அவரை வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். ஆனால் அரசு வேலையில் அப்படி வாய்ப்பில்லை. பல அலுவலகங்களில் மேலதிகாரிகளா அதிகாரம் இல்லாதவர்களாகதான் இருப்பார்கள்.
தேசத்தலைவர்கள் தேசத்திற்கு உழைத்த பலர் அரசு வேலையில் இல்லாதவர்கள்.
எங்காவது ஒரு சமூக நீதிகேட்டு நியாத்திற்கு போரடும் ஒருவன் அரசு வேலையில் இல்லை. அவன் வேலையில்லாதவன்.
சமூக பொறுப்பு அதிகம் இருக்க வேண்டியது அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தான்.
ஆனால் அது ஏனோ நம் தேசத்தில் குறைவு
(நல்ல அதிகாரிகள் இல்லை என்று சொல்லவில்லை அவர்களும் இருக்கிறார்கள்)

Tuesday, November 18, 2014

வட்டிக்கு வாங்குவது கொடுப்பதை விட ஷேர் டிரேட் ஆபத்தானது

வட்டிக்கு வாங்குவது கொடுப்பது பாவம் என்றும் எனவே ஷேர் டிரேட் செய்யலாம் என்றும் கூறுகிறார்கள்...
வட்டிக்கு விடுவது வாங்குவது எந்த வகையில் பாவம் என்று நினைக்கிறோமோ? அதை விட பாவமானது ஷேர் டிரேடிங். வட்டிக்கு விட்டாலாவது ஒருவர் ஒரு தொழிலில் முதலீடு செய்து அந்த முதலீட்டு லாபத்தை வட்டியாக கொடுப்பார்.
ஆனால் ஷேர் டிரேடில் உங்களுக்கு இலாபம் வந்தது என்றால் எங்கோ ஒருவர் தன் முதலீடை(பணத்தை) ஏமார்ந்திருக்கிறார்.
ஷேர் டிரேடில் எந்த ஒரு உற்பத்தியும் நடைபெறவில்லை என்பதே உண்மை.
ஷேர் என்ற சரியான வியாபார உத்தியை நோகாமல் பணம் பெற வேண்டும் என்ற பொருளாதார மேதைகள் ஷேர் டிரோடாக மாற்றி வளர்ச்சி என்பதையே ஷேர் என்று நினைக்கும் வகையில் மக்களை நம்பவைத்துவிட்டனர்.
உற்பத்தியையே ஆணிவேராக கொண்ட நமது நாட்டின் பொருளாதார சூழலுக்கு ஒரு போதும் உதவாது இந்த ஷேர் டிரேட்

Sunday, November 9, 2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி 09.11.2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி

சினிமா கலைஞர்களின் கற்பனைச் சுதந்திரம் மற்றும் அந்த கருத்து சுதந்திரத்தை பறிக்கும் போராட்டகாரர்கள்

எல்லாரும் அவங்க அவங்க சார்பா நல்லா பேசுனாங்க…

டைரக்டர் கமலக்கண்ணன் இது எங்கள் கருத்து சுத்திரத்தை கற்பனை சுதந்திரம்  நாங்களா உங்கள பாருங்கனு கூப்பிட்டோம்னு சொன்னார்… நீங்க ஏன் போராடுகறீங்க இது மாதிரி உட்கார்ந்து பேச வேண்டியது தானே அப்படினும் சொன்னார்…

ஒரு ஓவியர் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் அப்ப நாங்க அதை பார்த்துக்கொண்டு அவரோட கற்பனைச்சுதந்திரம்னு உட்கார்ந்திருக்கனுமா… ஒரு நிறுவனம் கடவுள்களின் படங்களை ஜட்டியில் பிரிண்ட் செய்து வெளியிட்டார்கள் அதை டிசைன் சுதந்திரம்னு சும்மா இருக்கனுமா…

சரி அது உங்க கற்பனைச் சுதந்திரம்னு சொல்றீங்க …
படம் ஆரம்பிக்கும் போது இதில் வரும் கதையும் கருத்துக்களும் கற்பனைனு போடுறீங்க… முடிவில் விவசாயிகளுக்கு சமர்பணம்னும் முடிக்கிறீங்க…

அப்பறம் அந்த கதை திருட்டு கதைனு சிலர் சொல்ல ஆரம்பிச்சதும் இது ஒரு ஊரோட கதை நான் அவங்க படும் கஷ்டத்தை பார்த்து எடுத்த படம்னு சொல்றீங்க…

7 ஆம் அறிவுனு ஒரு படம்
நடிகர் சூர்யா அந்த பட வெளியீட்டு விழாவில் “ஒரு தமிழரின் புகழ் தமிழர்களுக்கே தெரியாமல் இருப்பதை கண்டு எனக்கு கோபம் இதை கேட்டதும் தமிழுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் எல்லாருக்கும் தமிழனின் பெருமையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று இதில் நடித்தேன்” அப்படினு சொன்னார் இவர் பேசியது சினமால இல்ல ஒரு பொது மேடையில்….

இதையே டைரக்டர் முருகதாசும் பேசினார்…
ஆனா அதோட வேற்று மொழி பதிப்புகளில் அந்தந்த மாநிலத்தில் இருந்து வருவது போதும் இருக்கும்…
விஸ்வரூபம் கமல் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய படம் அதில் கோவை பற்றி ஒரு வசனம் வந்திருக்கும்… நீங்கள் சொல்வதுபோல் கற்பனை என்றால் அவர் கற்பனை என்ற சொல்ல வேண்டியது தானே ஏன் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்…

அப்படி ஆதாரம் இருந்தால் அதை காட்ட வேண்டாம் ஏன் வேற்று மொழி பதிப்புகளில் வேறு வேறு ஊர்களின் பெயர்களை பயன்படுத்தினார்
இப்படி கற்பனைனு சொல்லிட்டு காசுக்காக எதை எதையாவது கற்பனை பண்ணுவீங்க வேறா யாரும் எதுவும் கேட்கக்கூடாது…
படத்தை ரிலீஸ் பண்ணிட்டு விவாதம் பண்ணலாம்னு நீங்க கூப்பிடுறதே அந்த படத்தை புரோமோட் செய்யதான்… படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னால் நீங்கள் நான் இப்படி படம் எடுத்திருக்கேன் அப்படினு சொல்லி விவாதித்துவிட்டு  ரிலீஸ் செய்லாமே…

அப்பறம் எதுக்கு சென்சார் போர்டு இருக்கு நீங்க அங்கதான் கேக்கனும் என்று சொல்பவர்கள்…
சென்சார் போர்டு எப்படினு உங்களுக்கே தெரியும் அந்த சென்சார் போர்டு ரஜினி, சங்கர் … படங்களையும் சாதாரண டைரக்டர் புது ஹீரோ புது தயாரிப்பாளர் படங்களையும் ஒரே மாதிரி தான் பார்ப்பார்களா…

சந்திரமுகி படதில் வரும் அத்தனை காமெடிகளும் இரட்டை அர்த்த வசனங்களுடனே வரும் … கற்பனை வாதி வேண்டுமானால் “நீங்கள் ஏன் தவறான பார்வையில் பார்க்கிறீர்கள”; என்று கேட்கலாம்…
அப்போ நீங்க ரெட்டை அர்த்தத்தில் அதை எழுதவில்லை என்றால்;… அந்த வசனத்துடன் வடிவேலுவையும் வேலைக்காரியையும் ஒப்பிட்டுக்காட்டியதும் உங்கள் அந்த கற்பனை கருமம் தானே....

இதில் வரும் தடித்த வார்த்தைகளுக்கு ஒரு மியூட் கூட செய்திருக்கமாட்டார்கள்…

ஒரு அரசாங்கந்தை மாற்றவே 5 வருடம் கழித்துதான் முடியும் என்கிறபோது நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிட்டு நாங்க சென்சார் போடுட்ட கேட்கறதுக்குள்ள என்னென்ன நடக்கும்னு உங்களுடைய அந்த கற்பனை படங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது…

நல்லபடங்கள் நல்லகற்பனையாளர்கள் பலர் இருக்கிறார்கள் உண்மைதான் ஆனால் நாங்கள் திரைத்துறை என்று கூறி அனைவருக்கும் வக்கலத்து வாங்குறீங்க…

போராடுவது தப்புனா இதே திரைத்துறை உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டமும் ஒரு காலத்தில் ஒன்றாக திரண்டு நெய்வேலிக்கெல்லாம் போனீங்களே எதுக்க…

#உங்களுக்கு_வந்தா_இரத்தம்_மற்றவங்களுக்கு_தக்காளிச்சட்னியா….