Friday, April 25, 2014

100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

இந்த தலைப்பை வைத்துக்கொண்டு தான் இன்னும் சில நாட்களுக்கு இந்த ஊடங்கள் Manushya Puthiran போன்ற நடுநிலைவாதிகள்(அது ஒரு காலம்) என்று சொல்லியும் ஒரு நான்கு கட்சி பிரமுகர்களை வைத்துக்கொண்டும் மக்கள் மேல் குற்றம் சாட்டி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள்...

இந்த அரசியல் வாதிகளும் படித்தவர்களுக்கு நாட்டின் மேல் அக்கரை இல்லை சிலர் நடுநிலைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு தேர்தலை புறக்கணித்து ஜனநாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் பொருப்பில்லாதவர்கள் என்று இந்த ஜனநாயக பாதுகாவலர்களும் அப்பாவிகளை குறை சொல்லிவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் பேசிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்...

வெறும் தென் , மத்திய சென்னை, கன்னியாகுமரியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களை குறை கூறுவது முட்டாள் தனம்...

யாருக்கு பொருப்பில்லை வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து வரும் வாக்களார்களும் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்( பாருக் முகம்மது) என்பதற்கு உதாரணங்களும் இருக்கிறார்கள்..

யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது கூட தெரியாது ஆனாலும் நான் எனது ஜனநாயக கடமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று இந்த வெயிலிலும் வாயதான முதியவர்கள் பெரும்பான்மையானவர்கள் வந்து வாக்களித்தனர்..

நாமக்கே குழப்பம் வரலாம் யாரைக்கேட்டாலும் ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள் பிறகு எப்படி வாக்கு சதவீதம் குறைகிறது என்று...

இந்த குறைகளுக்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையத்திற்கென்று தனி அலுவலர்கள் இல்லாததும்.. மேலும் இன்னும் வாக்காளர்கள் சரிபார்த்தலில் குழறுபடிகள் இருப்பதுமே காரணம்
..
உதாரணமாக எங்கள் பகுதியில் 1405 வாக்காளர்கள்

இதில் சுமார் 15 சதவீதத்தினர் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள்
(குறிப்பு அவர்கள் வெளிநாட்டில் வசிக்க செல்லவில்லை)

இறந்தவர்கள் சுமார் 0.8 சதவீதம் ... வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் ஒரு 10 சதவீதம் பேர் இருக்கிறார்கள்...

எனக்கு தெரிந்து ஒரு 5 சதவீதம் பேர் வேண்டுமானல் எதற்கு ஓட்டெல்லாம் போட என்று மெத்தனமாக இருக்கலாம்...

எங்கள் பகுதியில் சுமார் 95 சதவீத வாக்குபதிவு என்றே நான் சொல்வேன் (கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா இருக்கும்)..

வாக்களிக்க தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்காதவர்களே அதிகம்...
பாரூக் முஹம்மது பாய் போல் அனைவருக்கும் வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது இயலாத காரியம்...

அதிலும் அவர்கள் ஒன்றும் வருடத்தில் 365 நாட்களுக்கு 180 நாட்களை வேலைநாட்களாக கொண்டும்... எலெக்சன் மற்றும் கணக்கெடுப்பு போன்ற நாட்டிற்கான வேலை வந்தவுடன் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு ஓடி ஒழிந்து கொள்ளும் ஆசிரியர் வேலை பார்க்கவில்லை...

ஒரு இந்தியனுக்கு தனக்கான வருமாத்திற்கான வழிவகையை செய்து கொடுக்க இந்த அரசுகளுக்கு வக்கில்லாததால் தான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் பிழைப்பிற்காக..

அவர்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உரிமையை நிலைநாட்ட ஆசையிருக்கத்தான் செய்யும் ...

அவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுக்காதது இந்த அரசுகளின் கையாளாகாத தனம் ...
அதைவிட்டு அவர்கள் உழைத்து கொண்டுவரும் வருமானத்தில் வரிஎன்று கொள்ளையடிப்பதை மட்டும் இந்த அரசு லாபகமாக செய்கிறது....

அடுத்து வெளிஊர்களில் வேலை செய்பவர்கள் அவர்களும் இந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போலதான் இந்த ஒரு நாள் விடுமுறையில் சென்னையில வேலை செய்யும் கன்னியாகுமரி வாக்காளர் எப்படி வாக்களிக்க முடியும்....
இதில் சிலர் வெளிமாநிலங்களிலும் வேலை செய்கிறார்கள்

அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பினை இந்த அரசாங்கமோ ஆணையமோ ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்கள் மேல் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்...

சும்மா டிவில பேசுறோம்னு எதையாவது பேசாதீங்கயா....

#வாக்களிக்க_வாய்ப்பு_கிடைக்காத_நண்பர்களுக்கு_சமர்ப்பணம்

---
#கபார்கான்_அறந்தாங்கியான்


Photo: 100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

இந்த தலைப்பை வைத்துக்கொண்டு தான் இன்னும் சில நாட்களுக்கு இந்த ஊடங்கள் Manushya Puthiran போன்ற நடுநிலைவாதிகள்(அது ஒரு காலம்) என்று சொல்லியும் ஒரு நான்கு கட்சி பிரமுகர்களை வைத்துக்கொண்டும் மக்கள் மேல் குற்றம் சாட்டி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள்...

இந்த அரசியல் வாதிகளும் படித்தவர்களுக்கு நாட்டின் மேல் அக்கரை இல்லை சிலர் நடுநிலைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு தேர்தலை புறக்கணித்து ஜனநாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் பொருப்பில்லாதவர்கள் என்று இந்த ஜனநாயக பாதுகாவலர்களும் அப்பாவிகளை குறை சொல்லிவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் பேசிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்...

வெறும் தென் , மத்திய சென்னை, கன்னியாகுமரியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களை குறை கூறுவது முட்டாள் தனம்...

யாருக்கு பொருப்பில்லை வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து வரும் வாக்களார்களும் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்( பாருக் முகம்மது) என்பதற்கு உதாரணங்களும் இருக்கிறார்கள்..

யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது கூட தெரியாது ஆனாலும் நான் எனது ஜனநாயக கடமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று இந்த வெயிலிலும் வாயதான முதியவர்கள்  பெரும்பான்மையானவர்கள் வந்து வாக்களித்தனர்.. 

நாமக்கே குழப்பம் வரலாம் யாரைக்கேட்டாலும் ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள் பிறகு எப்படி வாக்கு சதவீதம் குறைகிறது என்று...

இந்த குறைகளுக்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையத்திற்கென்று தனி அலுவலர்கள் இல்லாததும்.. மேலும் இன்னும் வாக்காளர்கள் சரிபார்த்தலில் குழறுபடிகள் இருப்பதுமே காரணம்
..
உதாரணமாக எங்கள் பகுதியில் 1405 வாக்காளர்கள்

இதில் சுமார் 15 சதவீதத்தினர் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள் 
(குறிப்பு அவர்கள் வெளிநாட்டில் வசிக்க செல்லவில்லை) 

இறந்தவர்கள் சுமார் 0.8 சதவீதம் ... வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் ஒரு 10 சதவீதம் பேர் இருக்கிறார்கள்...

எனக்கு தெரிந்து ஒரு 5 சதவீதம் பேர் வேண்டுமானல் எதற்கு ஓட்டெல்லாம் போட என்று மெத்தனமாக இருக்கலாம்...

எங்கள் பகுதியில் சுமார் 95 சதவீத வாக்குபதிவு என்றே நான் சொல்வேன் (கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா இருக்கும்)..

வாக்களிக்க தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்காதவர்களே அதிகம்... 
பாரூக் முஹம்மது பாய் போல் அனைவருக்கும் வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது இயலாத காரியம்...

அதிலும்  அவர்கள் ஒன்றும் வருடத்தில் 365 நாட்களுக்கு 180 நாட்களை வேலைநாட்களாக கொண்டும்... எலெக்சன் மற்றும் கணக்கெடுப்பு போன்ற நாட்டிற்கான வேலை வந்தவுடன் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு ஓடி ஒழிந்து கொள்ளும் ஆசிரியர் வேலை பார்க்கவில்லை...

ஒரு இந்தியனுக்கு தனக்கான வருமாத்திற்கான வழிவகையை செய்து கொடுக்க இந்த அரசுகளுக்கு வக்கில்லாததால் தான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் பிழைப்பிற்காக..

அவர்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உரிமையை நிலைநாட்ட ஆசையிருக்கத்தான் செய்யும் ... 

அவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுக்காதது இந்த அரசுகளின் கையாளாகாத தனம் ... 
அதைவிட்டு அவர்கள் உழைத்து கொண்டுவரும் வருமானத்தில் வரிஎன்று கொள்ளையடிப்பதை மட்டும் இந்த அரசு லாபகமாக செய்கிறது....

அடுத்து வெளிஊர்களில் வேலை செய்பவர்கள் அவர்களும் இந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போலதான் இந்த ஒரு நாள் விடுமுறையில் சென்னையில வேலை செய்யும் கன்னியாகுமரி வாக்காளர் எப்படி வாக்களிக்க முடியும்....
இதில் சிலர் வெளிமாநிலங்களிலும் வேலை செய்கிறார்கள் 

அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பினை இந்த அரசாங்கமோ ஆணையமோ ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்கள் மேல் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்... 

சும்மா டிவில பேசுறோம்னு எதையாவது பேசாதீங்கயா.... 

#வாக்களிக்க_வாய்ப்பு_கிடைக்காத_நண்பர்களுக்கு_சமர்ப்பணம்

---
#கபார்கான்_அறந்தாங்கியான்

No comments:

Post a Comment