Friday, November 7, 2014

மூடநம்பிக்கை என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு

நான் ரிஜிஸ்டர் மேரேஜ்தான் பண்ணிப்பேன்னு சொல்லலாம் அது அவர் அவர் விருப்பம்.
எனக்கு தாலிகட்டி மேரேஜ் பண்றது பிடிக்கவில்லை. தாலிகட்டினாதா மேரேஜா அப்பதான் நம்பிக்கை வருமா அது மூட நம்பிக்கை என சொல்லி பெரியார் கொள்கையை பின்பற்றுகிறேன் என சொல்பவர்கள்.
கடவுள் நம்பிக்கை என மூடநம்பிக்கையான விசயங்களை செய்பவர்களை விட இவர்கள் எந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பதே புரியவில்லை.
பெரியார் என்ன சொன்னார் என சொல்பவர்கள் ஏன் சொன்னார் என ஏன் சிந்திக்கவில்லை. அவரே நான் சொல்வதை உன் அறிவிடம் கேட்டு உன் அறிவு சொல்வது போல் நட என்றே சொல்லியிருக்கிறா.
ஆனால் இவர்கள் சொல்வதைப்பார்த்தால் இவர்கள் மனதில் பெரியார் கடவுளாக தெரிவதாகவே தெரிகிறது.
தாலிகட்டுனாதான் கணவன் மனைவி என்ற நம்பிக்கையா என கேட்பவர் அப்ப ஏன் ரிஜிஸ்டர் பண்ணாதான் கணவன் மனைவியா உங்க அறிவையே கேட்டு இரண்டு பேரும் சும்மா குடும்பம் நடத்த வேண்டியது தானே...
மேற்கத்திய பாசைல ”லிவ்விங் டு கெதர்”
இதை ஏன் பெரியார் சொன்னார்னு சொல்றீங்க ஆண்டாண்டு காலமா மேற்கத்திய கலாச்சாரம் இதுதானே...
முதலில் பெரியார் என்ன சொன்னார்னு இந்த கடவுள் கொள்கையோட திரியறவங்க மாதிரி கண்மூடித்தனமா திரியாம ஏன் சொன்னார்னு பல பேர் யோசிக்கமா ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும் என்றே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
மூடநம்பிக்கை என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு

No comments:

Post a Comment