Sunday, November 2, 2014

குழந்தைகள் உறவுகளை தமிழிலேயே கூப்பிட பழக்குங்கள் அதுவே தமிழுக்கு கவுரவம் என்பதைவிட நமக்கு அது தான் கவுரவம்

ஒரு குழந்தை அம்மாவைப்பார்த்து முதல் முதலாக எனக்கு எழுத சொல்லிக்கொடுனு சொன்னான் உடனே அவங்களும் ஒரு நோட் பேனாவ எடுத்து எழுத சொல்லிக்கொடுக்க உட்கார்ந்தாங்க ...
ஆனா அவங்க முதன் முதலாக எழுத சொல்லிக்கொடுத்த எழுத்து 'A` ...
முதன் முதலாக எழுத சொல்லிக்கொடுக்கும் போது ‘அ‘ னு தாய்மொழில ஆரம்பித்தால் தான் என்ன...
அதே போல் தற்போதைய நவநாகரீக அம்மாக்கள் குழந்தைகள் டாடி , மம்மி என்று தான் கூப்பிட வேண்டும் என்று நினைப்பதோடு குழந்தைகளையும் அப்படியே கூப்பிடவும் பழக்கிவிடுகிறார்கள்...
அம்மா அப்பா என்று தமிழில் கூப்பிடுவது கவுரவ குறைச்சலாகவும் அவமானமாகவும் தோன்றுமானால்... அவர்கள் அவர்களது அம்மா அப்பாவை தமிழில் தான் கூப்பிடுகிறார்கள்.
அப்படி என்றால் அவர்கள் அம்மா அப்பாவை தினமும் தமிழில் கூப்பிட்டு அவர்களை அவமானப்படுத்துகிறார்களா???
ஏன் இந்த போலி சந்தோசம்
எப்படி குழந்தைகள் முதன் முதலாக பேசும் போது அம்மாவையும் அப்பாவையும் தான் கூப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறீர்களோ...
அதை அவர்கள் தமிழில் கூப்பிடுவதுதான் சிறப்பு...
குழந்தைகள் உறவுகளை தமிழிலேயே கூப்பிட பழக்குங்கள் அதுவே தமிழுக்கு கவுரவம் என்பதைவிட நமக்கு அது தான் கவுரவம்..

No comments:

Post a Comment